Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமல் சென்னை தமிழ் பேசினால் ரொம்ப பிடிக்கும்! -மூடர்கூடம் சஞ்சீவி

21 பிப், 2016 - 10:32 IST
எழுத்தின் அளவு:
I-love-Kamal-spoking-chennai-tamil-says-actor-Sanjeevi

மூடர் கூடம் படத்தில் ஆட்டோ குமார் வேடத்தில் நடித்தவர் சஞ்சீவி. நவீன் இயக்கிய அந்த படத்தை டைரக்டர் பாண்டிராஜ் தனது பசங்க புரொடக்சன்ஸ் சார்பில் வெளியிட்டார். அப்படத்தில் சஞ்சீவியின் கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்டது. குறிப்பாக தனது காமெடி நடிப்பால் ரசிகர்களை வயிறு வலிக்கும் அளவுக்கு சிரிக்க வைத்தவர். அதனால் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வந்த அவரது கைவசம் தற்போது யாழ், நே, லென்ஸ் உள்பட பல படங்கள் உள்ளன.

இதுபற்றி சஞ்சீவி கூறுகையில், தமிழ் சினிமாவுக்கு கூத்துப்பட்டறை ஏராளமான நடிகர்களை தந்திருக்கிறது. அந்த வரிசையில் நானும் கூத்துப்பட்டறையில் இருந்து சினிமாவுக்கு வந்த நடிகன்தான். எனது முதல் படமாக மூடர்கூடம் அமைந்தது. அப்படம் வெளியான நேரத்தில் நான் நடித்த கேரக்டரும் பேசப்பட்டது. அதனால் கவனிக்கப்படும் நடிகராகி விட்டேன். அதையடுத்து பல படங்களில் நடித்த நான் இப்போது பரவலாக நடித்துக்கொண்டிருக்கிறேன்.


மேலும், நான் கூத்துப்பட்டறையிலும் ஆசிரியராக இருந்து வருகிறேன்.அந்த வகையில், ஆயிரக்கணக்கானவர்களுக்கு நடிப்பு பயிற்சி கொடுத்திருக்கிறேன். நடிப்பில் பலமுகம் உண்டு அதை நடித்துக்காட்டி பயிற்சி கொடுத்து வருகிறேன். இப்படி எல்லாவிதமான கேரக்டர்களாகவும் மாறி நடிப்பு பயிற்சி கொடுப்பதால் எந்தமாதிரியான வேடம் கொடுத்தாலும் நடிக்கும் அளவுக்கு நானும் தேர்ச்சி பெற்று விட்டேன்.


என்னை இம்ப்ரஸ் பண்ணிய நடிகர் யார் என்றால் அது கமல் சார்தான். அதிலும் அவர் சென்னை தமிழ் பேசி நடித்தால் ரொம்ப ரசிப்பேன். அப்படி அவர் நடித்தது மாதிரியே நே -என்ற படத்தில் நானும் சென்னை தமிழ் பேசி நடிக்கிறேன். அதற்கு கமல் சார்தான் எனக்கு ரோல் மாடல். மேலும், தமிழ் நாட்டில் சென்னை, மதுரை, நெல்லை, கோவை என ஏரியா வாரியாக மக்கள் பேசும் தமிழை பேசும் அளவுக்கு என்னை வளர்த்துக்கொண்டுள்ளேன். ஆக, எந்த ஏரியா கேரக்டர்களிலும் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்.


அதோடு, நான் எதிர்பார்க்கிற மாதிரியான வாய்ப்புகள் இன்னும் எனக்கு அமையவில்லை. அப்படி கிடைக்கும்போது நடிப்பில் நான் கற்று வைத்திருக்கிற விசயங்களை பயன்படுத்தி என்னை இன்னும் உயர்த்திக்கொள்வேன். அதனால் திறமையை நிலைநாட்ட சரியான சந்தர்ப்பத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறேன். அதுவரைக்கும் சிறிய வாய்ப்புகள் என்றாலும் தவிர்க்காமல், அதிலும் என்னை நிரூபித்து வருகிறேன் என்கிறார் சஞ்சீவி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in