கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
மூடர் கூடம் படத்தில் ஆட்டோ குமார் வேடத்தில் நடித்தவர் சஞ்சீவி. நவீன் இயக்கிய அந்த படத்தை டைரக்டர் பாண்டிராஜ் தனது பசங்க புரொடக்சன்ஸ் சார்பில் வெளியிட்டார். அப்படத்தில் சஞ்சீவியின் கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்டது. குறிப்பாக தனது காமெடி நடிப்பால் ரசிகர்களை வயிறு வலிக்கும் அளவுக்கு சிரிக்க வைத்தவர். அதனால் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வந்த அவரது கைவசம் தற்போது யாழ், நே, லென்ஸ் உள்பட பல படங்கள் உள்ளன.
இதுபற்றி சஞ்சீவி கூறுகையில், தமிழ் சினிமாவுக்கு கூத்துப்பட்டறை ஏராளமான நடிகர்களை தந்திருக்கிறது. அந்த வரிசையில் நானும் கூத்துப்பட்டறையில் இருந்து சினிமாவுக்கு வந்த நடிகன்தான். எனது முதல் படமாக மூடர்கூடம் அமைந்தது. அப்படம் வெளியான நேரத்தில் நான் நடித்த கேரக்டரும் பேசப்பட்டது. அதனால் கவனிக்கப்படும் நடிகராகி விட்டேன். அதையடுத்து பல படங்களில் நடித்த நான் இப்போது பரவலாக நடித்துக்கொண்டிருக்கிறேன்.
மேலும், நான் கூத்துப்பட்டறையிலும் ஆசிரியராக இருந்து வருகிறேன்.அந்த வகையில், ஆயிரக்கணக்கானவர்களுக்கு நடிப்பு பயிற்சி கொடுத்திருக்கிறேன். நடிப்பில் பலமுகம் உண்டு அதை நடித்துக்காட்டி பயிற்சி கொடுத்து வருகிறேன். இப்படி எல்லாவிதமான கேரக்டர்களாகவும் மாறி நடிப்பு பயிற்சி கொடுப்பதால் எந்தமாதிரியான வேடம் கொடுத்தாலும் நடிக்கும் அளவுக்கு நானும் தேர்ச்சி பெற்று விட்டேன்.
என்னை இம்ப்ரஸ் பண்ணிய நடிகர் யார் என்றால் அது கமல் சார்தான். அதிலும் அவர் சென்னை தமிழ் பேசி நடித்தால் ரொம்ப ரசிப்பேன். அப்படி அவர் நடித்தது மாதிரியே நே -என்ற படத்தில் நானும் சென்னை தமிழ் பேசி நடிக்கிறேன். அதற்கு கமல் சார்தான் எனக்கு ரோல் மாடல். மேலும், தமிழ் நாட்டில் சென்னை, மதுரை, நெல்லை, கோவை என ஏரியா வாரியாக மக்கள் பேசும் தமிழை பேசும் அளவுக்கு என்னை வளர்த்துக்கொண்டுள்ளேன். ஆக, எந்த ஏரியா கேரக்டர்களிலும் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்.
அதோடு, நான் எதிர்பார்க்கிற மாதிரியான வாய்ப்புகள் இன்னும் எனக்கு அமையவில்லை. அப்படி கிடைக்கும்போது நடிப்பில் நான் கற்று வைத்திருக்கிற விசயங்களை பயன்படுத்தி என்னை இன்னும் உயர்த்திக்கொள்வேன். அதனால் திறமையை நிலைநாட்ட சரியான சந்தர்ப்பத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறேன். அதுவரைக்கும் சிறிய வாய்ப்புகள் என்றாலும் தவிர்க்காமல், அதிலும் என்னை நிரூபித்து வருகிறேன் என்கிறார் சஞ்சீவி.