ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? |
ராஜபாளையத்தில் திறந்தவெளி கழிப்பறையை ஒழிக்க விஷாலின் 'மருது' பட குழுவினர் 80 ஆயிரம் ரூபாய் காசேசாலையை, கான்ட்ராக்டரிடம் அளித்தனர். இதன் மூலம் 10 வீடுகளுக்கு கழிப்பறை கட்டும் வசதி கிடைக்கும். அதோடு கழிப்பறை வசதி இல்லாதவர்களுக்கு வசதி செய்து தரும் முயற்சியை மேற்கொண்டுள்ளார் விஷால்.
கதகளி படத்திற்கு பிறகு விஷால் நடித்து வரும் படம் மருது. விஷால் உடன் ஸ்ரீதிவ்யா, சூரி ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். முத்தையா இயக்குகிறார். மருது படப்பிடிப்பு விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் சில மாதங்களாக நடந்து வருகின்றன. இதில் நடிகர்கள் விஷால், சூரி, நடிகை ஸ்ரீதிவ்யா நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், ராஜபாளையம் நகராட்சி புதிய ஆணையாளராக தனலட்சுமி பொறுப்பேற்றவுடன், திறந்தவெளி கழிப்பறையால் சுகாதார கேடு ஏற்படுவதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார். பல தெருக்களில் மானியம் கிடைத்தாலும், அதற்கு மேல் செலவாகும் பணத்திற்கு வழி இல்லாத ஏழைகள் செய்வதறியாது திகைத்தனர். இந்த பிரச்னை மருது படப்பிடிப்பில் ஈடுபட்டு இருக்கும் நடிகர் விஷாலுக்கு தெரிந்தது.
இதையடுத்து விஷால், சூரி, நடிகை ஸ்ரீதிவ்யா ஆகியோர் ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி குலாளர் தெருவிற்கு, நகராட்சி ஆணையாளர் தனலட்சுமியுடன் சென்றனர். அப்பகுதியை சேர்ந்த ராஜேந்திரன், மனோன்மணி வீடுகளுக்கு சென்று கழிப்பறை கட்டும் இடத்தை பார்வையிட்டு, ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். பின், ஏழைகளுக்கு மத்திய, நகராட்சி மானியத்துடன் கழிப்பறை கட்ட தேவைப்படும் மீதி தொகையை படப்பிடிப்பு குழுவினர் அளித்தனர். இதற்காக 80 ஆயிரம் ரூபாய் காசேசாலையை நகராட்சி ஆணையாளர் தனலட்சுமி முன்னிலையில் நடிகர்கள் விஷால், சூரி, நடிகை ஸ்ரீதிவ்யா, கான்ட்ராக்டரிடம் அளித்தனர்.
இதுகுறித்து நடிகர் விஷால் கூறுகையில், ""ராஜபாளையம் கிராமங்களில் கழிப்பறை கட்ட வசதி இல்லாத ஏழைகள் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர். இதற்காக இரவில் இருட்டாக உள்ள பகுதிகளை பெண்கள் தேடி செல்வது கஷ்டமாக உள்ளது. மத்திய, நகராட்சி மானியம் தவிர மீதம் உள்ள தொகையை கூட கட்ட வசதியில்லாத ஏழைகளை தேர்ந்தெடுத்து, அவர்கள் 10 பேருக்கு மருது படகுழுவினர் சார்பில் கழிப்பறை கட்ட முதற்கட்டமாக பண உதவி செசய்கிறது. இதற்காக 80 ஆயிரம் ரூபாய் காசோலை அளித்தோம். இது தவிர மேலும் பல ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதே நிலையில் உள்ளனர். இவர்களுக்காக, பிப்ரவரி 23ல் ராஜபாளையம் தென்காசி ரோடு தனியார் ஓட்டலில் கலந்தாய்வு கூட்டம் நடத்த உள்ளோம். இதில் நண்பர்கள், தொழிலதிபர்கள், டாக்டர்கள் கலந்துகொள்வர். அவர்களிடம் ஏதாவது ஒரு வீட்டிற்கு அல்லது மொத்தமாக கழிப்பறை கட்ட பண உதவி கோர உள்ளோம். அனைவரும் கைகோர்த்து செயல்பட்டால், திறந்தவெளி கழிப்பறை பிரச்னை குறையும் என்றார்.