இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ராஜபாளையத்தில் திறந்தவெளி கழிப்பறையை ஒழிக்க விஷாலின் 'மருது' பட குழுவினர் 80 ஆயிரம் ரூபாய் காசேசாலையை, கான்ட்ராக்டரிடம் அளித்தனர். இதன் மூலம் 10 வீடுகளுக்கு கழிப்பறை கட்டும் வசதி கிடைக்கும். அதோடு கழிப்பறை வசதி இல்லாதவர்களுக்கு வசதி செய்து தரும் முயற்சியை மேற்கொண்டுள்ளார் விஷால்.
கதகளி படத்திற்கு பிறகு விஷால் நடித்து வரும் படம் மருது. விஷால் உடன் ஸ்ரீதிவ்யா, சூரி ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். முத்தையா இயக்குகிறார். மருது படப்பிடிப்பு விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் சில மாதங்களாக நடந்து வருகின்றன. இதில் நடிகர்கள் விஷால், சூரி, நடிகை ஸ்ரீதிவ்யா நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், ராஜபாளையம் நகராட்சி புதிய ஆணையாளராக தனலட்சுமி பொறுப்பேற்றவுடன், திறந்தவெளி கழிப்பறையால் சுகாதார கேடு ஏற்படுவதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார். பல தெருக்களில் மானியம் கிடைத்தாலும், அதற்கு மேல் செலவாகும் பணத்திற்கு வழி இல்லாத ஏழைகள் செய்வதறியாது திகைத்தனர். இந்த பிரச்னை மருது படப்பிடிப்பில் ஈடுபட்டு இருக்கும் நடிகர் விஷாலுக்கு தெரிந்தது.
இதையடுத்து விஷால், சூரி, நடிகை ஸ்ரீதிவ்யா ஆகியோர் ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி குலாளர் தெருவிற்கு, நகராட்சி ஆணையாளர் தனலட்சுமியுடன் சென்றனர். அப்பகுதியை சேர்ந்த ராஜேந்திரன், மனோன்மணி வீடுகளுக்கு சென்று கழிப்பறை கட்டும் இடத்தை பார்வையிட்டு, ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். பின், ஏழைகளுக்கு மத்திய, நகராட்சி மானியத்துடன் கழிப்பறை கட்ட தேவைப்படும் மீதி தொகையை படப்பிடிப்பு குழுவினர் அளித்தனர். இதற்காக 80 ஆயிரம் ரூபாய் காசேசாலையை நகராட்சி ஆணையாளர் தனலட்சுமி முன்னிலையில் நடிகர்கள் விஷால், சூரி, நடிகை ஸ்ரீதிவ்யா, கான்ட்ராக்டரிடம் அளித்தனர்.
இதுகுறித்து நடிகர் விஷால் கூறுகையில், ""ராஜபாளையம் கிராமங்களில் கழிப்பறை கட்ட வசதி இல்லாத ஏழைகள் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர். இதற்காக இரவில் இருட்டாக உள்ள பகுதிகளை பெண்கள் தேடி செல்வது கஷ்டமாக உள்ளது. மத்திய, நகராட்சி மானியம் தவிர மீதம் உள்ள தொகையை கூட கட்ட வசதியில்லாத ஏழைகளை தேர்ந்தெடுத்து, அவர்கள் 10 பேருக்கு மருது படகுழுவினர் சார்பில் கழிப்பறை கட்ட முதற்கட்டமாக பண உதவி செசய்கிறது. இதற்காக 80 ஆயிரம் ரூபாய் காசோலை அளித்தோம். இது தவிர மேலும் பல ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதே நிலையில் உள்ளனர். இவர்களுக்காக, பிப்ரவரி 23ல் ராஜபாளையம் தென்காசி ரோடு தனியார் ஓட்டலில் கலந்தாய்வு கூட்டம் நடத்த உள்ளோம். இதில் நண்பர்கள், தொழிலதிபர்கள், டாக்டர்கள் கலந்துகொள்வர். அவர்களிடம் ஏதாவது ஒரு வீட்டிற்கு அல்லது மொத்தமாக கழிப்பறை கட்ட பண உதவி கோர உள்ளோம். அனைவரும் கைகோர்த்து செயல்பட்டால், திறந்தவெளி கழிப்பறை பிரச்னை குறையும் என்றார்.