ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
திருமதி செல்வம், செல்வி, மகாபாரதம் உள்பட சுமார் 30 சீரியல்களில் நடித்தவர் லதா ராவ். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் எந்த சீரியல்களிலும் நடிக்கவில்லை. அதேசமயம் சில படங்களில் நடித்து வருகிறார். அவரிடத்தில், மீண்டும் சின்னத்திரைக்கு வருவீர்களா? இல்லை சினிமாவில் மட்டும்தான் நடிப்பீர்களா? என்று கேட்டபோது...
சின்னத்திரைதான் என்னை மக்களுக்கு அடையாளம் காட்டியது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என நிறைய சீரியல்களில் நடித்திருக்கிறேன். ஒவ்வொரு தொடரிலும் ஒவ்வொரு விதமான வேடங்களில் நடித்ததால் இப்போது எந்த மாதிரியான வேடம் கொடுத்தாலும் என்னால் நடிக்க முடியும் என்கிற அளவுக்கு தேர்ச்சி பெற்று விட்டேன். சீரியல்களில் நடித்து வந்தபோதே, தில்லாலங்கடியில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்தேன். அந்த காமெடி காட்சிகள் டிவியிலும் அடிக்கடி வந்து கொண்டிருப்பதால் அந்த படம் சினிமாவில் என்னை பிரபலப்படுத்தி விட்டது. பின்னர் பல படங்களில் நடித்து வந்த நான், இப்போது கே.எஸ்.ரவிக்குமார் சுதீப்பை வைத்து இயக்கியுள்ள முடிஞ்சா இவனை புடி என்ற படத்திலும் நடித்திருக்கிறேன். இந்த படத்தில் கதாநாயகி நித்யாமேனனின் அண்ணியாக நடித்திருக்கிறேன். அதோடு கடிகாரமுள் என்ற படத்திலும் நடித்துள்ளேன்.
அந்த வகையில், நான் சின்னத்திரையில் நடித்து இரண்டு வருடமாகி விட்டது. இப்படி சின்னத்திரைக்கு பிரேக் கொடுத்ததின் முக்கிய காரணம் நேரம் இல்லாததுதான். எனது முதல் மகன் 2-ஆம் வகுப்பும், இரண்டாவது மகன் யுகேஜியும் படிக்கிறார்கள். அதனால் அவர்களை கவனிக்க எனக்கு நேரம் தேவைப்படுகிறது. மேலும், டிவி சீரியல்களில் நடித்தால் அதற்கு அதிக நேரம் செலவிட வேண்டியதிருக்கும். ஆனால் சினிமாவைப் பொறுத்தவரை அதிகபட்சம் 10 நாட்கள்தான் படப்பிடிப்பு இருக்கும். அதனால்தான் தற்போது சினிமாவில் மட்டுமே நடித்து வருகிறேன். அதேசமயம், இப்போதைக்கு நேரம் இன்மை காரணமாக டிவி சீரியல்களில் நடிக்காத நான் எதிர்காலத்தில் நேரம் அதிகமாக கிடைக்கும்போது மறுபடியும் சீரியல்களில் நடிப்பேன் என்கிறார் லதாராவ்.