டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
விஜய் சேதுபதி நடித்த 'சூது கவ்வும்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நலன் குமாரசாமி. 2013ல் வெளிவந்த அந்தப் படம் வித்தியாசமான கதை, திரைக்கதை கொண்ட படமாக அமைந்து வெற்றி பெற்றது. வளர்ந்து வரும் நேரத்திலேயே 40 வயதைக் கடந்த ஒரு கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியை அந்தப் படத்தில் நாயகனாக நடிக்க வைத்தார் நலன். அதற்கடுத்து மூன்று வருடம் கழித்து நலன் இயக்கியுள்ள 'காதலும் கடந்து போகும்' படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. 'சூது கவ்வும்' படத்திற்கு அடுத்து சுந்தர் .சி இயக்கத்தில் வெளிவந்த 'தீயா வேலை செய்யணும் குமாரு' படத்திற்கு நலன் குமாரசாமி வசனம் எழுதியதுடன் திரைக்கதை உருவாக்கத்திலும் பங்கெடுத்தார்.
தற்போது தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்குனராக அறிமுகமாகும் 'மாயவன்' படத்திற்கு நலன் குமாரசாமி திரைக்கதை, வசனம் எழுதுகிறார். நலன் குமாரசாமி இயக்கிய 'சூது கவ்வும், காதலும் கடந்து போகும்' ஆகிய படங்களின் தயாரிப்பாளர்தான் சி.வி.குமார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னை இயக்குனராக அறிமுகப்படுத்தி இரண்டாவதாகவும் படம் இயக்க வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளருக்காக நலன் மீண்டும் வசனம் எழுதுகிறார்.
நலன் இயக்கி அடுத்த மாதம் வெளிவர உள்ள 'காதலும் கடந்து போகும்' படத்திற்கு இப்போதே ரசிகர்களிடம் ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.