ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா படங்களுக்குப்பிறகு தான் நடித்த ஜன்னல் ஓரம் படத்தை அவர் பெரிய அளவில் எதிர்பார்த்தார் விமல். ஆனால் அந்த படத்தை ரிலீஸ் செய்வதிலேயே பிரச்சினை. அதனால் தனது சம்பளத்தைகூட விட்டுக்கொடுத்தார் விமல். அதையடுத்து அவர் நடித்த புலிவால், ஒரு ஊர்ல ரெண்டு ராஜா போன்ற படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவியது. அதனால் அதற்கு முன்பு வரை ஒன்னே கால் கோடி வரை சம்பளம் கேட்டுக்கொண்டிருந்த விமல், சம்பளத்தை தடாலடியாக குறைத்தார்.
அதோடு, காவல் படத்தில் சமுத்திரகனி, அஞ்சல படத்தில் பசுபதி ஆகியோரே லீடு ரோலில் நடித்தபோதும் தனது மார்க்கெட் நிலை கருதி விட்டுக்கொடுத்து நடித்தார். அப்படி அவர் நடித்த படங்கள் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. அதனால் அதிகப்படியான புதுமுக டைரக்டர்களின் படங்களில் நடித்து வந்த விமல், இப்போது அதை தவிர்க்கத் தொடங்கியிருக்கிறார். அஞ்சல படத்திற்கு பிறகு தன்னிடம் கதை சொல்ல தொடர்பு கொண்ட சில புதியவர்களிடம், புதுமுக டைரக்டர்களை நம்பி நடித்த பல படங்கள் எனக்கு தோல்விகளாக கொடுத்து விட்டன. அதனால், சிலகாலத்துக்கு புதுமுக டைரக்டர்களின் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டு, முன்னணி டைரக்டர்களின் படங்களில் நடிக்க முடிவெடுத்திருக்கிறேன் என்று கூறியுள்ள விமல், அஞ்சலியுடன் நடித்த மாப்ள சிங்கம் படத்தை அடுத்து தற்போது பூபதி பாண்டியன் இயக்கும் மன்னர் வகையறா படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.