ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! |
3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத், அப்படத்தின் கொலவெறி பாடல் மூலம் உலகப்புகழ் பெற்றார். தொடர்ந்து பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்த அனிருத், சிம்பு உடன் சேர்ந்து பீப் சாங் என்கிற ஆபாசப்பாடலுக்கு இசையமைத்ததாக எழுந்த சர்ச்சை காரணமாக கனடாவில் தலைமறைவாக பதுங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில் அந்த பாடலுக்கு நான் இசையமைக்கவில்லை என்று காவல்துறையில் விளக்கம் அளித்த பிறகு வெளியே தலைகாட்ட ஆரம்பித்துள்ளார் அனிருத். எனினும் பீப் சாங் விவகாரத்தில் அவரது பெயர் அடிபட்டதால் பல படங்களில் இருந்து அனிருத்தை நீக்கிவிட்டதாக திரையுலகில் தகவல் உலவுகிறது. அவரை வளர்த்துவிட்ட தனுஷே கொடி படத்திலிருந்து அனிருத்தை நீக்கிவிட்டு சந்தோஷ் நாராயணனை புக் பண்ணி இருக்கிறார்.
தன் உறவினரான தனுஷே தன்னை ஒதுக்கி வைத்துவிட்டாரே என்ற மன வருத்தத்தில் இருக்கிறாராம் அனிருத். இதற்கிடையில், இனி வருடத்துக்கு 3 மட்டுமே இசையமைப்பேன் என்று அறிவித்துள்ளார் அனிருத்.
படங்களுக்கு இசையமைப்பதில் ஆர்வம் இல்லையா? என்று கேட்டால், எனக்கு என்று சில லட்சியங்கள் இருக்கின்றன. நான் என்ன நினைத்து சினிமாவுக்கு வந்தேனோ, அது நடந்துவிட்டது. இனி எனக்கு பிடித்ததை மட்டுமே பண்ணுவேன். அதாவது, இனிமேல் வருடத்தின் தொடக்கம், இடைப்பட்ட காலத்தில் ஒன்று, இறுதியில் ஒன்று என வருடத்துக்கு மூன்று படங்கள் மட்டுமே பண்ணுவேன். மூன்று படங்களில் பதினெட்டு பாட்டு. அனைத்துமே சிறப்பானதாக இருக்கும். இப்படி இல்லாமல் நிறைய படம் பண்ணினால் நான் ஒரு தொழிற்சாலையாகி விடுவேன். அப்படியிருப்பதில் எனக்கு விருப்பமில்லை. என்று விளக்கம் அளிக்கிறார் அனிருத்.