சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி |
பரத் நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தில் தமிழுக்கு வந்தவர் மலையாள நடிகை பூர்ணா. அதையடுத்து கந்தகோட்டை, துரோகி, வித்தகன், ஜன்னல் ஓரம், தகராறு என பல படங்களில் நாயகியாக நடித்தவர். இதில் தகராறு படத்தில் நெகடீவ் ரோலில் நடித்தார். பின்னர் தமிழில் சரியான படங்கள் இல்லாததால் தெலுங்கு, மலையாளம் என்று நடித்து வந்த பூர்ணா, இப்போது மீண்டும் தமிழில் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
அதில் மணல்கயிறு-2 படத்தை அவர் பெரிய அளவில் எதிர்பார்க்கிறார். விசு இயக்கத்தில் 1982-ல் வெளியான மணல்கயிறு படத்தின் இரண்டாம் பாகமான இந்த படத்தை யாருடா மகேஷ் இயக்குனர் மதன்குமார் இயக்க, மணல்கயிறு படத்தின் முதல் பாகத்தில் நாயகனாக நடித்த எஸ்.வி.சேகரின் மகன் அஸ்வின் சேகர் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக முன்பு சாந்தி கிருஷ்ணா நடித்த வேடத்தில் இப்போது பூர்ணா நடிக்கிறார்.
அதோடு, முதல் பாகத்தில் எஸ்.வி.சேகர்தான் தனது வருங்கால மனைவி எந்த மாதிரி இருக்க வேண்டும் என்று பத்து கண்டிசன்களை போடுவார். அதேபோல் இப்போது கதாநாயகி பூர்ணா வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று பத்து கண்டிசன்களை போடுகிறாராம். அதனால் பூர்ணாவின் வேடம்தான் படம் முழுக்க ஆக்ரமிக்கிறதாம். முதன்முறையாக பக்கா குடும்பக்கதையில் நடிக்கும் பூர்ணா, கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து பொறுப்பாக நடித்து வருகிறாராம். மேலும், முதல் பாகத்தில் நடித்த விசு, எஸ்.வி.சேகர் இருவரும் முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்து வருகிறார்கள். இதில் விசுவுக்கு இரண்டு பக்கமும் குழப்பத்தை விளைவித்து விடும் நாரதர் வேடமாம். அதனால் அவரது வேடம் படம் முழுக்க கிச்சு கிச்சு மூட்டுவதாக அமைந்துள்ளதாம்.