கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
நாணி இயக்குனர் ஹனு ரகவபுடி இயக்கத்தில் நடித்த கிரிஷ்னகாடி வீர ப்ரேம காத எனும் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 14 ரீல்ஸ் எண்டர்டையின்மென்ட் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் பாலகிருஷ்ணாவின் ரசிகராக நாணி நடித்திருந்தார். படம் ஆரம்பிக்கும் முன்னரே டைட்டில் கார்டில் மகேஷ் பாபு மற்றும் பாலகிருஷ்ணாவிற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
பாலகிருஷ்ணாவின் புகைப்படங்கள் மற்றும் வசனங்களை பயன்படுத்தி கைதட்டல் வாங்கியதற்காகதான், பாலகிருஷ்ணாவிற்கு நன்றி தெரிவிக்கப்பட்டதாக ஒரு சாரர் கூறினாலும் மகேஷ் பாபுவிற்கும் இப்படத்திற்கும் என்ன சம்மந்தம் என கேள்வி எழுந்தது. அதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது. அதாவது இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான 14 ரீல்ஸ் எண்டர்டையின்மென்ட் நிறுவனத்திற்கு மகேஷ் பாபு டூகுடு, நம்பர் 1, ஆகடு போன்ற படங்கள் நடித்துக் கொடுத்துள்ளார்.
இதில் டூகுடு மட்டுமே வெற்றி பெற்றது. மற்ற படங்கள் பெரும் தோல்வியைச் சந்தித்தன. இதற்காக மகேஷ் பாபு வெளியில் தெரியாமல் அந்நிறுவனத்திற்கு நஷ்டஈடு வழங்கியுள்ளாராம். மேலும் கிரிஷ்னகாடி வீர ப்ரேம காத படத்தின் பாடல்கள் வெளியீட்டில் கலந்து கொண்ட மகேஷ் பாபு 14 ரீல்ஸ் எண்டர்டையின்மென்ட் நிறுவனம் தனது சொந்த நிறுவனம் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.