'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாகுபலி படத்தின் சரித்திரம் காணாத வெற்றி நம்ம ஊர் ஹீரோக்களை பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது. பாகுபலி படத்தைப் போல் சரித்திரக்கதையில் நடிக்க வேண்டும் என்ற தன் ஆசையை புலி படத்தில் தீர்த்துக்கொண்டார் விஜய். ஆனால் புலி படம் அவரை பிறாண்டிவிட்டது. விஜய்யின் போட்டியாளரான அஜித்துக்கும் இப்படியொரு ஆசை ஏற்பட்டதன் விளைவுதான்... விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் சரித்திரப்படம்.
எழுத்தாளர் பாலகுமாரனுடன் இணைந்து அஜித் நடிக்க உள்ள படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் இயக்குநர் விஷ்ணுவர்தன். இதனை இயக்குநர் விஷ்ணுவர்தன் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி இருந்தார். கூடுதல் தகவலாக அஜித்துக்காக தான் பணியாற்றி வரும் கதை சோழ மன்னரைப் பற்றியது என்று தெரிவித்திருக்கிறார் எழுத்தாளர் பாலகுமாரன்.
அதுமட்டுமல்ல, "அஜித்குமாருக்காக கதை எழுதுவது உண்மைதான். ஆனால் தஞ்சை பெரியகோயில் பற்றிய கதையோ, ராஜராஜ சோழனைப் பற்றிய கதையோ அல்ல. ஆனால் ஒரு சோழ மன்னரைப் பற்றிய கதை என்பதை மட்டும் இப்போதைக்கு உறுதியாகச் சொல்ல முடியும்" என்றும் சொல்லி இருக்கிறார் எழுத்தாளர் பாலகுமாரன்.
ராஜேந்திர சோழன் பற்றி சமீபத்தில் ஒரு புத்தகம் எழுதினார் பாலகுமாரன். அந்த புத்தகம் எழுதுவதற்காக பல்வேறு ஆராய்ச்சிகளையும் செய்தார். தற்போது அஜித்துக்காக பாலகுமாரன் திரைக்கதை அமைத்து வருவது ராஜேந்திர சோழன் பற்றிய கதையைத்தான்.