இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ராஜபாட்டை, தாண்டவம், டேவிட், ஐ, பத்து எண்றதுக்குள்ள ஆகிய படங்களின் அதிர்ச்சி தோல்வியில் இருந்து மீண்டு வந்துள்ள விக்ரம், தற்போது அரிமா நம்பி இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கும் இருமுகன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதில் இரண்டு வேடங்களில் நடிக்கும் விக்ரமுக்கு ஜோடியாக நயன்தாரா, நித்யாமேனன் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். இப்படத்தில் முதலில் காஜல் அகர்வால்தான் நாயகியாக நடிப்பதாக இருந்தது. ஆனால் பின்னர் நயன்தாராவின் மார்க்கெட்டை கருத்தில் கொண்டு அவருக்காக பல மாதங்களாக காத்திருந்து புக் பண்ணினர். அப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடந்துள்ளது.
மேலும், எப்போதும் தனது ஒவ்வொரு படங்களுக்காகவும் மெனக்கெடும் விக்ரம் இந்த படத்தின் இரண்டு வேடங்களுக்காக ரொம்பவே மெனக்கெடுகிறாராம். அந்தவகையில், ஜூன் மாதம் இருமுகன் படம் திரைக்கு வந்து விடுமாம். அதையடுத்து, தீராத விளையாட்டு பிள்ளை திரு இயக்கும் கருடா படத்தில் நடிக்கிறார் விக்ரம். கருடா இதுவரை விக்ரம் நடிக்காத அளவுக்கு அதிரடியான ஆக்சன் படமாம். இந்த படத்தின் சண்டை காட்சிகளில் பிரமாண்டம் காட்டுவதற்காக பிரபல ஹாலிவுட் பைட் மாஸ்டரை நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ள தாம்.
மேலும், இருமுகன் படத்தில் முதலில் நடிப்பதாக இருந்து பின்னர் நீக்கப்பட்ட காஜல்அகர்வால், இந்த கருடா படத்தில் நாயகியாக நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. குறிப்பாக, இருமுகன் படத்தில் கமிட்டாகி பின்னர் நீக்கப்பட்ட காஜல் அகர்வால் அதை எண்ணி ரொம்பவே பீல் பண்ணினாராம். இந்த சேதி விக்ரமின் காதுக்கு வந்ததை அடுத்து, கருடா படத்தில் அவரை நடிக்க வைக்கலாம் என்று பரிந்துரை செய்தாராம். அதன்பிறகுதான் கருடா படத்தில் காஜல்அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டாராம்.