தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அட்டகத்தி, குக்கூ, திருடன் போலீஸ், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படங்களுக்கு பிறகு தினேஷ் நடிப்பில் வெளியான படம் விசாரணை. வெற்றிமாறன் இயக்கிய இந்த படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டதோடு, அப்படத்தை தமிழ் சினிமாவில் முன்னணி கலைஞர்கள் பலருக்கும் திரையிட்டு காண்பித்தார் வெற்றிமாறன். அப்போது கமல், மணிரத்னம் உள்பட பலரும் விசாரணை படத்தை பாராட்டினர். அதேபோல், ரஜினியும் விசாரணை படத்தை பாராட்டினார். குறிப்பாக, அப்படத்தில் நாயகனாக நடித்த அட்டகத்தி தினேஷின் நடிப்பை வெகுவாக பாராட்டினாராம் ரஜினி.
இதுபற்றி தினேஷ் கூறுகையில், நானெல்லாம் இப்போதுதான் வளர்ந்து கொண்டிருக்கிற நடிகன். இந்த நேரத்தில் ரஜினி சாருடன் கபாலியில் நடிக்கிறேன். இது என் கேரியரில் மிகப்பெரிய வாய்ப்பு. இந்த வாய்ப்பு டைரக்டர் ரஞ்சித்தினால்தான் சாத்தியமானது. என்னை அட்டகத்தியில் கதாநாயகன் ஆக்கியவர் அவர்தான். இப்போது அவரே ரஜினி சாருடனும் நடிக்க வைத்து என்னை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார்.
அதோடு, இந்த கபாலியில் நடிக்கும்போது நான் மட்டுமின்றி கலையரசன், தன்ஷிகா, ரித்விகா என ஒவ்வொருவரும் நடிக்கும்போதும் எங்களை மனதாரா பாராட்டினார் ரஜினி சார். அதனால் எங்களுக்கும் இன்னும் நன்றாக நடித்து அவரிடம் பாராட்டு பெற வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டு கொண்டேயிருந்தது. இந்த நேரத்தில் நான் நாயகனாக நடித்த விசாரணை படத்தைப்பார்த்து விட்டும் ரஜினி சார் பாராட்டி ரஜினி, எனது நடிப்பையும் பாராட்டினார். இது எனக்கு பெரிய சந்தோசத்தைக் கொடுத்துள்ளது என்கிறார் தினேஷ்.