தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகை லிஸி தென்னிந்திய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர். இயக்குனர் பிரியதர்ஷனை திருமணம் செய்து கொண்டு சமீபத்தில் அவரை விட்டு பிரிந்து வாழ்கிறார். இந்த நிலையில் "லிஸியின் தந்தை நான்தான், லிஸி என்னை தனியாக தவிக்க விட்டுவிட்டார். அவர் எனக்கு மாதம்தோறும் பணம் தரவேண்டும்" என்று கேரள மாநிலம் மூவாற்றுப்பிளையை சேர்ந்த வர்க்கி என்பவர் உள்ளூர் ஆர்.டி.ஓவிடம் புகார் செய்தார். அவரும், வர்க்கி தான் லிஸியின் தந்தை என்பதை உறுதி செய்து, லிஸி மாதம்தோறும் வர்கிக்கு 5 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதை எதிர்த்தும், வர்க்கி, என் தந்தை இல்லை என்று கூறி லிஸி, கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட் வர்க்கி, லிஸியின் தந்தை என்பதை உறுதி செய்து உதவி தொகையை 10 ஆயிரமாக உயர்த்தி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து லிஸி ஐகோர்ட் பென்ஞ்சில் மேல்முறையீடு செய்தார். அங்கும் லிஸி, வர்க்கிக்கு 10 ஆயிரம் வழகவேண்டும் என்று உத்தரவு வந்தது. இருந்தாலும் லிஸி, வர்க்கி தன் தந்தை இல்லை என்று தொடர்ந்து வாதாடி வருகிறார்.
இந்த நிலையில் வர்க்கி, தான்தான் லிஸியின் தந்தை என்பதை நிரூபிக்க டி.என்.ஏ மரபணு சோதனைக்கு தயார் என்று புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து லிஸி விளக்கம் அளிக்குமாறு கோர்ட் கூறியுள்ளது. இதனால் விரைவில் வர்க்கீசுக்கு மரபணு சோதனை நடத்தப்படலாம் என்று தெரிகிறது.