தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஒரு தப்பாட்ட கலைஞனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் ஆடி. கதை வசனம் எழுதி இயக்குகிறார் புதுமுகம் எஸ்.எம். "படத்தின் நாயகன் தப்பாட்ட கலைஞன். ஆனால் தன் வாழ்க்கையில் எதுவுமே தப்பாக இருக்க கூடாது என்று நினைக்கிறவன். அக்காள் மகளை உயிருக்கு உயிராக காதலிக்கிறான். இந்த நிலையில் ஊர் பண்ணையாரின் மகனுக்கு ஹீரோயின் மீது காமம். அவளை அடைய துடிக்கிறான். ஒரு முயற்சியில் அவன் மீது காறி உமிழ்ந்துவிட்டு வந்து விடுகிறாள். அவமானப்பட்ட அவனோ, அவளை அடைந்துவிட்டதாக ஊருக்குள் பரப்புகிறான். விஷயம் தீயாக பரவுவதற்கு முன்பு தப்பாட்ட கலைஞனுக்கு மகளை மணமுடிக்கிறாள் தாய்.
வில்லன் பரப்பிய வதந்தி தப்பாட்டை கலைஞன் வீட்டிலும் பற்றி எரிகிறது. சந்தேக தீயால் காதல் எரிகிறது. அவள் தன்னை சுத்தமானவள் என்று எப்படி நிரூபித்தாள் என்கிற கதை. இன்னும் கிராமங்களில் ஈரம் குறையாத காதல் படம்" என்கிறார் இயக்குனர் எஸ்.எம்.துரை சுதாகர், டோனா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். பழனி பாலு இசை அமைக்கிறார். ராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். நிலா புரமோட்டர்ஸ் சார்பில் ஹீரோ துரை சுதாகரே தயாரிக்கிறார். படப்படிப்புகள் வேகமாக நடந்து வருகிறது.