பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
சமீபத்தில் வெளியான படங்களில் கவனத்தை ஈர்த்த படம் விசாரணை. வெற்றிமாறன் இயக்கத்தில் 'அட்டகத்தி' தினேஷ், சமுத்திரகனி, ஆனந்தி உட்பட பலர் நடித்துள்ள இப்படம் ஏற்கெனவே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகள் பெற்றது! சில வாரங்களுக்கு முன் வெளியான விசாரணை படம் ரசிகர்களிடமும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ரஜினி உட்பட, பல பிரபலங்களின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. எனினும் வசூல் ரீதியாக விசாரணை படம் வெற்றியடையவில்லை.
இந்நிலையில் விசாரணை படத்தின் ஹிந்தி ரீ-மேக் உரிமையை பிரபல மலையாளப்பட இயக்குனர் ப்ரியதர்சன் வாங்கியுள்ளார். இப்படத்தை விரைவில் ஹிந்தியில் ப்ரியதர்சன் இயக்கவிருக்கிறார் என்றும் அதில் அக்ஷய் குமார் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. விசாரணை படத்தை இந்தியில் ப்ரியதர்ஷன் இயக்க இருக்கிறார் என்ற தவகல் வெளியாகியுள்ளது ரசிகர்கள் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. காரணம்.... ப்ரியதர்ஷன் கமர்ஷியல் படங்களை இயக்குபவர். விசாரணை படமோ வணிக சமரசங்களுக்கு அப்பாற்பட்ட மிகச்சிறந்த படைப்பு.
அதை ப்ரியதர்ஷன் இயக்கி அதில் அக்ஷய் குமார் நடித்தால் அந்தப் படம் மசாலாப்படமாகிவிடுமே என்று கவலையை வெளிப்படுத்தி உள்ளனர். நல்ல சினிமாவை நேசிக்கும் ரசிகர்கள் சிலர் விசாரணை படத்தின் இந்தி ரீமேக் ரைட்ஸை ப்ரியதர்ஷனுக்கு விற்காமல் நீங்களே இயக்குங்கள் என்று வெற்றிமாறனுக்கு கோரிக்கையும் வைத்துள்ளனர். இதுதான் உண்மையான படைப்பின் வெற்றி.
வெற்றிமாறன் புரிந்து கொள்வாரா?