இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ், த்ரிஷா முதன் முறையாக ஜோடி சேர்ந்து நடிக்கும் படம் 'கொடி'. இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் சார்ந்த கதையாக உருவாகி வரும் இப்படத்தில் தனுஷுடன் ஷாம்லியும் நடிப்பதாக முதலில் சொல்லப்பட்டது. ஆனால், அவரால் சொன்ன தேதியில் கால்ஷீட்டை ஒதுக்க முடியாததால் இந்தப் படத்தில் நடிக்கவில்லை என்றார்கள். அவருக்குப் பதிலாக 'பிரேமம்' படத்தில் நடித்த மடோனா செபாஸ்டியன் நடிக்கப் போகிறார் என கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியானது.
ஆனால், 'கொடி' படத்தில் மடோனா செபாஸ்டியன் நடிப்பதாக வந்த செய்தியில் உண்மையில்லை என்று தெரிகிறது. இது பற்றி, அவர் “நான் அடுத்து தமிழில் நடிக்கும் படம் பற்றிய 'உண்மையான' தகவல்களைப் பற்றி நண்பர்கள் கேட்டுக் கொண்டே இருப்பதால் நான் முழித்துக் கொண்டேன். அப்படி வந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்று மட்டும் நான் உறுதியாகச் சொல்ல முடியும்,” என்று தெரிவித்துள்ளார். ஷாமிலி விலகியதற்கான உண்மையான காரணமே இதுவரையில் வெளிவரவில்லை. அதற்குள் மடோனா பற்றிய பரபரப்புச் செய்தி வெளியில் வந்துவிட்டது.
விஜய் சேதுபதி ஜோடியாக மடோன நடித்துள்ள 'காதலும் கடந்து போகும்' படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.