டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
'சென்னை 28' படத்தின் மூலம் விளையாட்டை மையமாக வைத்து விளையாட்டாக படமெடுத்து இயக்குனர் ஆனவர் வெங்கட் பிரபு. அதற்குப் பிறகு அவர் இயக்கிய 'சரோஜா, கோவா' ஆகிய படங்கள் வெற்றி பெறாமல் போனது. இருந்தாலும் 'மங்காத்தா' படத்தின் மூலம் வித்தியாசமான அஜித்தைக் காட்டி அவரும் தன்னை ஒரு இயக்குனராக அடையாளம் காட்டிக் கொண்டார். அந்த ஒரு வெற்றியே அவருக்கு அடுத்தடுத்து படங்களைப் பெற்றுத் தந்தது.
கார்த்தி நடித்த 'பிரியாணி', சூர்யா நடித்த 'மாசு என்கிற மாசிலாமணி' ஆகிய படங்களை இயக்கினார். ஆனால், இந்தப் படங்களும் தோல்வியடைந்ததால் அடுத்து எந்த வாய்ப்பும் கிடைக்காமல் இருந்து வந்தார். அவருக்கு ஏற்கெனவே படம் இயக்க அட்வான்ஸ் கொடுத்திருந்தவர்களும் அதைத் திருப்பிக் கேட்க ஆரம்பித்தனர்.
இதனால் தன்னை மீண்டும் நிரூபித்துக் காட்ட வேண்டிய கட்டாயத்திற்கு வெங்கட் பிரபு ஆளாகியிருக்கிறார். மற்ற யாரும் வாய்ப்பு தராததால் தானே சொந்தமாகத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து அதில் 'சென்னை 28' படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க உள்ளார். அடுத்த மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. மீண்டும் தான் ஆரம்பித்த இடத்திலிருந்தே தன்னுடைய அடுத்த கட்ட பயணத்தை வெங்கட் பிரபு ஆரம்பிக்க உள்ளார். விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.