ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
தமிழ் நாட்டில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பேசினாலே பிரச்சினை வெடிக்கும். இந்த சூழ்நிலையில் இட ஒதுக்கீட்டினால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஜாதிகளில் உள்ள பணக்காரர்கள் மட்டுமே பயன் அடைகிறார்கள். மற்றவர்கள் கூலித் தொழிலாளிகளாவும், சிறுநீரகத்தை விற்று வாழ்கிறவர்களாகவும் இருக்கிறார்கள். இட ஒதுக்கீட்டில் படித்து வேலை பெற்று உயர் பதவியில் இருப்பவர்கள் அதன் பிறகு தஙகள் ஜாதி மக்களை திரும்பி பார்ப்பதும் இல்லை. அவர்கள் உயர்வுக்கு உழைப்பதும் இல்லை. எனவே இட ஒதுக்கீட்டில் மாற்றம் தேவை என வலியுறுத்தி ஒரு படம் எடுத்திருக்கிறார்கள். அந்தப் படத்திற்கு நல்லவாயன் நாரவாயன் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். இட ஒதுக்கீட்டின் மூலம் படித்து கலெக்டராகவும், உயர் அதிகாரிகளாகவும் உயர்ந்தவர்கள் அந்த பதவிகளை தங்கள் மக்களுக்காக தூக்கி எறிந்து விட்டு வருகிற மாதிரியான கதையாம்.
அஜ்மல், ஆருஷி ஹீரோ, ஹீரோயின்களாக நடித்துள்ளனர், சந்தோஷ், பன்சி இரண்டாவது நாயகன் நாயகியாக நடித்துள்ளனர். நாசர், கோட்டா சீனிவாச ராவ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். ஆர்.பி.பட்நாயக் இசை அமைத்துள்ளார். பாஸ்கர்ராவ் தயாரித்து, இயக்கி உள்ளார்.