ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
முதன்முறையாக சேதுபூமி திரைப்படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆகி ,வறண்ட பூமியான இராமநாதபுரம் பகுதியையும் பசுமையாக தன் ஒளிப்பதிவில் பதிவு செய்து., பல தரப்பு பாராட்டு களையும் பெற்றுள்ளார் ஒளிப்பதிவாளர் எஸ்.முத்துராமலிங்கம்.
தான் , சினிமாவுக்கு வந்தது பற்றியும் , ஒளிப்பதிவாளர் ஆனது குறித்தும்சேது பூமி" முத்துராமலிங்கம் இவ்வாறு கூறுகிறார். எவ்வாறு?இதோ , அவர் சொல்ல கேளுங்கள் ...
எனக்கு , திருநெல்வேலி மாவட்டம் உப்புவாணியமுத்தூர் என்ற கிராமம்தான் சொந்த ஊர் ...எனது பள்ளி படிப்பை அருகில் உள்ள வீரவநல்லூரில் முடித்துவிட்டு, திருநெல்வேலி-யில் டிப்ளமோ இன்ஜினியரிங் படிக்கும் போது போட்டோகிராபி எனது , பொழுது போக்காக மட்டுமே இருந்தது. எல்லரையும் போல் நானும் சென்னைக்கு வேலை தேடிவந்த போது, ஊடகதுறையில் பணி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. போட்டோகிராபியில் பேஷன் , மாடலிங் , ஆர்ட்ஸ் & கல்சர், வொயில்டுலைப், இண்டஸ்ட்ரியல், ஸ்போர்ட்ஸ் ...என நிறைய வகைகள் உள்ளது, இவை அனைத்தும் சினிமா ஒளிப்பதிவில் மட்டுமே சாத்தியம் ... என உணர்ந்தேன். இதுவே என் சினிமா ஆசைக்கு காரணம் ஆனது.
எனவே ,தீவிரமான சினிமா வாய்ப்பு தேடி முயற்சி செய்ய தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், பிரபல ஒளிப்பதிவாளர் கே.விஆனந்தின் உதவியாளரும் , ஒளிப்பதிவாளருமான டி. கண்ணன் அவர்களிடம் பீஷ்மர் (2002-ம் ஆண்டு) படம் தொடங்கி ., சந்தோஷ் சுப்பிரமணியம்(2006-ம் ஆண்டு) திரைப்படம் வரை இணை ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தேன். பின்னர் தனியாக முயற்சிகள் செய்து வந்த போது கிடைத்த நட்பின் காரணமாக ஒளிப்பதிவாளர் ஆர் .மதி அவர்களுடன் இணைந்து "பையா" திரைப்படம் மற்றும் சில விளம்பர படங்களிலும் , தலா ஒருதெலுங்கு, இந்தி படத்திலும் பணி புரிந்தேன்.
சேதுபூமி இயக்குனர் கேந்திரன் முனியசாமி எனக்கு நல்ல நண்பர். தான் ஒரு கிராமத்து கதையை இயக்க போவதாக கூறினார். இப்பொழுது உள்ள சினிமா சூழலில் கிராமத்து கதைக்கு ஒளிப்பதிவு சவாலான விஷயமாகும். ஏனெனில் லைட்டிங் ஸ்டைல் ,விஷூவல் எபெக்ட்ஸ் ...போன்ற டெக்னிக்கல் விஷயங்களை மிகைபடுத்த முடியாது, மக்களின் இயல்பான வாழ்க்கை முறையை பதிவு செய்ய வேண்டும்.
அதற்காக அப்படக்கதை சம்பந்தப்பட்ட இராமநாதபுரம் மாவட்டம்சார்ந்த பகுதிகளை படம்பிடிக்க முடிவு செய்து கொண்டு, வழக்கமான ஒரு இராமநாதபுர ஏரியா சினிமாவாக இல்லாமல். அழகான, பசுமையான படமாக இருக்கவேண்டும் என முடிவு செய்து, அதற்கான லொகேஷன், பருவ காலநிலைகளை தேர்வு செய்து, பாடல்கள் உட்பட "சேது பூமி மொத்தப் படத்தையும் அங்கேயே படமாக்கினோம். இப்போது, படம் பார்த்த அனைவரும் ஒளிப்பதிவு பற்றி பாராட்டும் போது மிகுந்த நிறைவை அளிக்கிறது. அடுத்து வரும் படங்களிலும் இதே மாதிரி சிறப்பான தொழில் நுட்ப விஷயங்களை ரசிகர்களுக்கு விருந்தாக்க விரும்புகிறேன்.
நான் என்றும் கதைக்கு மீறாத ஒளிப்பதிவும், இயக்குனர்களுக்கு திருப்திகரமான ஒளிப்பதிவாளர் ஆகவும் பணி செய்யவேஆசைப் படுகிறேன் என்னும் ஒளிப்பதிவாளர் எஸ்.முத்துராமலிங்கம்., அடுத்து ., கில்லி தரணியின் உதவியாளர் நந்தன் இயக்கத்தில் பிரபா" எனும் படத்திற்கு திறம்பட ஒளிப்பதிவு செய்து முடித்துவிட்டு அதன் வெளியீட்டிற்காகவும், வேறுபட வாய்ப்பிற்காகவும் காத்திருக்கிறாராம். ஆல் த பெஸ்ட்...முராலி அலைஸ் முத்துராமலிங்கம்.