மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் |
நடிப்பால் வசீகரிக்கக்கூடிய நடிகைகளில் வித்யாபாலன் முதன்மையானவர். இவர் பெங்காலி படமான 'ராஜ்காஹினி' படத்தின் இந்தி ரீ-மேக்கில் நடிக்க இருப்பதாக சில தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியான நிலையில், இப்போது அவர், எழுத்தாளர் கமலா தாஸின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க இருக்கிறார். இதை பிரபல மலையாள இயக்குநர் கமல் இயக்குகிறார்.
இப்படம் கமலாதாஸின் வாழ்க்கையை மூன்று கட்டங்களாக பிரதிபலிக்க உள்ளது. ஒன்று 15வயதில் அவருடைய திருமணம், இரண்டாவது அவருடைய எழுத்தாளர் முகம், மூன்றாவதாக அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியது... உள்ளிட்ட மூன்று முக்கிய நிகழ்வுகள் இப்படத்தில் இடம்பெறுகின்றன.
இதுப்பற்றி இயக்குநர் கமல் கூறியதாவது... பாலிவுட்டின் சிறந்த நடிகைகளில் வித்யாபாலனும் ஒருவர். இஸ்கியா, தி டெர்ட்டி பிக்சர்ஸ் போன்ற படங்களில் தைரியமாக நடித்தவர். கமலாதாஸின் வாழ்க்கை வரலாற்று படத்தை எடுக்க நினைத்தவுடன் என் நினைவுக்கு வந்த நடிகை வித்யாபாலன் தான். இந்தப்படத்தில் நடிக்க அவர் தான் சரியான நபர். வித்யாபாலனை மலையாளத்தில் நடிக்க வைக்க தான் எண்ணினேன். ஆனால் இப்போது ஒரேநேரத்தில் மலையாளம் மற்றும் இந்தி இரண்டு மொழியிலும் இப்படத்தை இயக்க உள்ளேன். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று கூறியுள்ளார்.