ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
திரிஷா-நயன்தாரா இருவரும் சமகாலத்து நடிகைகள்தான். அவர்கள் வளர்ந்து கொண்டிருந்தபோது முன்னணி ஹீரோக்களின் படங்களை கைப்பற்றுவதில் திரைக்குப்பின்னால் அவர்களுக்கிடையே ஏகப்பட்ட மோதல் வெடித்துக் கொண்டிருந்தது. குறிப்பாக, ஒருத்தருக்கான வாய்ப்பை இன்னொருவர் தட்டிப்பறித்து விட்டால், அவர்களை கண்டபடி வசைபாடுவதும் வழக்கமாக நடந்து வந்தது. அதனால் திரிஷா கலந்து கொள்ளும் விழாக்களில் நயன்தாராவோ, நயன்தாரா கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் திரிஷாவை கலந்து கொள்ளாமல் இருந்து வந்தனர்.
ஆனால் அப்படி இரண்டு துருவங்களாக இருந்த அவர்களை தனது தம்பி சத்யா நடித்த அமரகாவியம் படத்தின் ஆடியோ விழாவுக்கு வரவைத்து பக்கத்து பக்கத்து இருக்கையில் அமர வைத்தார் ஆர்யா. அப்போது அவர்களை கைகுலுக்க வைத்து நட்பு வளர்த்து விட்டார். விளைவு, அதிலிருந்து இப்போதுவரை திரிஷா-நயன்தாராவின் நட்பு வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறதாம். ஒருவர் நடித்த படத்தை இன்னொருவர் பார்த்து விட்டு கருத்து சொல்லும் அளவுக்கு நெருக்கமாக வளர்ந்துள்ளார்களாம்.
விளைவு, சமீபத்தில் ஒரு தெலுங்கு படத்தில் நடிப்பதற்கு தன்னை அணுகியவர்களிடம் தான் பிசியாக இருப்பதாக சொல்லி அந்த வாய்ப்பை திரிஷாவுக்கு திருப்பி விட்டுள்ளாராம் நயன்தாரா. அதோடு அவர் என் ப்ரண்டு, நல்ல ஆர்ட்டிஸ்ட் என்று திரிஷாவுக்கு நற்சான்றிதழ் வாசித்துள்ளாராம் நயன்தாரா.