கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
சினிமாவில் ஒரு ஜோடி தொடர்ந்து இணைந்து நடித்தாலோ அல்லது ஒரு இயக்குனரின் படங்களில் தொடர்ந்து ஒரே நடிகை நடித்தாலோ அவர்களுக்கிடையே காதல் இருப்பதாக கிசுகிசுக்கள் புகைவது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில், குட்டிப்புலி, கொம்பன் ஆகிய இரண்டு படங்களிலுமே லட்சுமிமேனன் நடித்ததால் அந்த படத்தை இயக்கிய முத்தையாவுக்கும், லட்சுமிமேனனுக்குமிடையே காதல் இருப்பதாக சிலகாலமாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்னிறன்.
அதோடு, தற்போது விஷாலை வைத்து தான் இயக்கி வரும் மருது படத்திற்கும் முதலில் லட்சுமிமேனனைதான் நடிக்க வைப்பதாக இருந்தார் முத்தையா. ஆனால் விஷாலின் தலையீடடின் பேரில் பின்னர் மருது படத்திற்கு ஸ்ரீதிவ்யா கமிட்டானார். ஆக, மருது படத்திலும் லட்சுமிமேனனையே நடிக்க வைக்க முத்தையா முயற்சி செய்த விஷயம் வெளியில் பரவியதை அடுத்து, அவர்களுக்கிடையே காதல் இருக்கிற செய்தி இனனும் வேகமாக பரவியது.
ஆனால் அதுகுறித்து இதுவரை லட்சுமிமேனனோ, முத்தையாவோ எந்த கருத்தும் சொல்லாமல் அவரவர் வேலையில் பிசியாக இருந்தனர். இந்த நிலையில், சமீபத்தில் அதுகுறித்த கேள்விக்கு லட்சுமிமேனன் பதிலளிக்கையில், எனக்கு யார் மீதும் காதல் இல்லை. அதற்கு நேரமும் இல்லை. படிப்பு, நடிப்பு என்று பிசியாக இருக்கிறேன். மற்றபடி நீங்கள் சொல்லும் அந்த இயக்குனருக்கு என் மீது காதல் இருக்கிறதா? என்று எனக்கு தெரியவில்லை என்று கூறி கிசுகிசுவுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்துள்ளார் லட்சுமிமேனன்.