டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ் சினிமாவில் பேய்பட சீசன் நிலவுவது போலவும், பேய் படங்கள்தான் வெற்றி பெறுவது போலவும் ஒரு மாயத்தோற்றம் நிலவிக்கொண்டிருகிறது. ஆனால் நிஜத்தில் தமிழ் சினிமா விளையாட்டில்தான் ஜெயித்துக்கொண்டிருக்கிறது. ஸ்போர்ட்ஸ் மூவி என்ற வரைமுறைக்குள் சில படங்கள் வராவிட்டாலும் அதை நோக்கிய கதைகளால வெற்றி பெற்று வருகிறது.
இந்த விளையாட்டு சினிமாவின் வெற்றிக்கணக்கை துவக்கி வைத்தது சுசீந்தரனின் முதல் படமான வெண்ணிலா கபடிக்குழு. நமது மண்ணின் விளையாட்டான கபடியை மையமாக கொண்டு அதில் உள்ள உள்ளூர் அரசியலை கொண்டு வெளிவந்து அதிர்வலைகளை ஏற்படுத்திய படம்.
பிரபு சாலமன் இயக்கத்தில் சிபிராஜ் நடித்த லீ படம் கால்பந்து கதை களம் கொண்டது. சிபிராஜின் வெற்றி படங்களில் அது முக்கியமானது. அறிவழகன் இயக்கிய வல்லினம் கூடைப்பந்தை மையமாக கொண்டது.
கிரிக்கெட்
கிரிக்கெட்டை வைத்து நிறைய படங்கள் வந்து விட்டது. அதில் முக்கியமானது சென்னை 28. உள்ளூர் கிரிக்கெட்டை மையமாக கொண்டது. அந்த படம்தான் வெங்கட்பிரபுவை இயக்குனராக அடையாளம் காட்டியது, ஜெய், மிர்சி சிவா, விஜய் வசந்த், என பல நடிகர்களை கொடுத்தது.
கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் கிரிக்கெட் பயிற்சியாளராக நடித்த போடா போடி காமெடி படமாக கலெக்ஷன் பார்த்து. சுசீந்திரன் தேசிய கிரிக்கெட்டில் நிலவும் சாதி, அரசியல், பண விளையாட்டை அப்படியே 'ஜீவா' படத்தில் காட்டினார். ஆடாம ஜெயிப்போமடா என்ற காமெடி படம் கிரிகெட் பெட்டிங்கை அப்பட்டாக, காமெடியாக சொன்னது.
குத்துச்சண்டை
குத்துச் சண்டையை மையமாக கொண்டும் பல படங்கள் வெளிவந்தது. அதில் முக்கியமானது பூலோகம். வட சென்னையில் ஒரு காலத்தில் பாரம்பரியமான விளையாட்டாக இருந்த குத்துச் சண்டையை பதிவு செய்ததோடு. சர்வதேச குத்துச் சண்டையில் இருக்கும் வியாபார அரசியலை தெளிவாக உணர்த்தியது.
மான் கராத்தே படம் குத்துச் சண்டையை கமர்ஷியல் சினிமாவாக காட்டியது. எல்லாவற்றுக்கும் மேலாக இறுதிச்சுற்று குத்துச்சண்டை உலகத்தையே திரைக்கு கொண்டு வந்தது. ஒரு அரசு பணிக்காக உயிரை பணயம் வைக்கும் அப்பாபி மக்களின் வாழ்க்கையை சொன்னது.
தடகளம்
எதிர்நீச்சலும், ஈட்டியும் தடகள விளையாட்டை பேசியது. தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ளவும் காதலி முன் தலை நிமிர்ந்து நிற்கவும் ஓட்டத்தில் ஹீரோ வென்று காட்டுவது எதிர்நீச்சல் கதை, உடல் ரீதியாக ஒரு குறை இருந்தும் அந்த குறையுடனேயே தடைதாண்டும் ஓட்டத்தில் தடைதாண்டி வெல்லும் வீரனின் கதை ஈட்டியில்.
கேரம் போர்ட் பற்றி சுண்டாட்டம், 5 பேர் விளையாடும் கால்பந்து பற்றி ஐவராட்டம் என சிறுசிறு படங்கள் கூட வந்திருக்கிறது. இப்படி விளையாட்டை தொட்ட படங்கள் பெரும்பாலும் வெற்றியை தொட்டிருக்கிறது. அல்லது பாராட்டை அள்ளியிருக்கிறது. மேலே குறிப்பிட்ட எந்த படமும் சோடை போகவில்லை என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியம்.
இறுதி சுற்றின் வெற்றி மேலும் சில விளையாட்டு படங்களுக்கு பாதை போட்டு கொடுத்திருக்கிறது. தமிழ் சினிமா ஆரோக்கியமான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த விளையாட்டு படங்களின் வெற்றியே சாட்சி.