வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பாகுபலி படத்தில் வில்லனாக மிரட்டிய ராணா பெங்களூர் நாட்கள் படத்தில் தனது எதார்த்த நடிப்பினால் ரசிகர்களைக் கவர்ந்து விட்டார். பெங்களூர் நாட்கள் புரமோஷனில் கலந்து கொண்ட ராணா, தனது திருமணம் குறித்த கேள்விக்கு வேடிக்கையாக பதிலளித்துள்ளார். தெலுங்கு படங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து வந்த ராணா பாகுபலி மற்றும் பெங்களூர் நாட்கள் படங்களின் வெற்றிக்கு பின்னர் தமிழிலும் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.
ராணாவின் அடுத்த படங்கள் என்ன என்று கேட்பது போல் எப்போது திருமணம் என்ற கேள்வியும் அவரிடம் அடிக்கடி கேட்கப்படுகின்றது. இதற்கு அண்மையில் பதிலளித்த ராணா, பாகுபலி 2 படத்தை பார்த்த பின்னர் யாரும் என்னை திருமணம் செய்ய முன்வரமாட்டார்கள் என நகைச்சுவையுடன் கூறியுள்ளார். மேலும் தெலுங்கில் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளதால் அவற்றை முடித்த பின்னரே திருமணம் குறித்து யோசிக்கவுள்ளதாகவும் ராணா கூறியுள்ளார்.