இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நான் ஈ, வெப்பம் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகர் நானி தற்போது டோலிவுட்டில் முன்னணி நடிகராக வளர்ந்து வருகின்றார். பலே பலே மகாதேவோ படத்தின் வெற்றிக்கு பின்னர், கிருஷ்ணகாடி வீர ப்ரேம கதா எனும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு முன்னர் இயக்குனர் மணிரத்னம் இயக்கும் படத்தில் நானி நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இடையில் அப்படம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வரவுள்ள கிருஷ்ணகாடி வீர ப்ரேம கதா படத்தின் புரமோஷனில் கலந்து கொண்ட நானி, இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தான் நடிக்கவிருந்த படம் கைவிடப்பட்டதற்கான காரணத்தை கூறியுள்ளார்.
மணிரத்னம் தயார் செய்து வைத்த கதையைச் சார்ந்து பாலிவுட்டில் ஒரு படம் வெளியிடப்பட்டதாலும், அப்படத்திற்கும் மணிரத்னம் படத்திற்கும் அதிக ஒற்றுமைகள் இருந்ததாலும் அப்படத்தை மணிரத்னம் கைவிட்டதாக நாணி கூறியுள்ளார். ஓகே கண்மணி படத்தின் தெலுங்கு மொழிமாற்றத்தில் துல்கருக்கு குரல் கொடுத்த நானி, விரைவில் மணிரத்னம் இயக்கத்திலும் நடிப்பேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.