டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஆடுகளம் படத்துக்குப் பிறகு ஏறக்குறைய ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கியுள்ள படம் - விசாரணை. தினேஷ், சமுத்திரக்கனி, ஆனந்தி நடித்துள்ள விசாரணை படத்தை தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்தின் அனைத்து உரிமைகளையும் படம் வெளியாகும் முன்பே லைகா நிறுவனத்திடம் விற்றுவிட்டனர். அந்த வகையில் தயாரிப்பாளர்களாக தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இருவருக்கும் சில கோடிகள் லாபம் கிடைத்தது.
பல்வேறு திரைப்பட விழாக்களில் பாராட்டைப் பெற்ற விசாரணை படம் பிப்ரவரி 5 வெளியானது. பல பட விழாக்களில் விருது பெற்றாலும் விசாரணை படம் தமிழ்நாட்டில் ஓடுமா என்ற அச்சம் வெற்றிமாறனுக்கே இருந்தது. அதனால்தான் படத்துக்கு பெரிய அளவில் விளம்பரம் கூட செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
இந்நிலையில், விசாரணை படத்துக்கு எதிர்பார்த்ததை விட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படத்தைப் ஓடவைக்க விசாரணை படத்தைப் பார்த்த பல்வேறு தமிழ் திரையுலக பிரபலங்களிடம் அவர்களது வாழ்த்து மற்றும் பாராட்டுகளை பெற்று பேப்பர் விளம்பரம் செய்து வருகின்றனர். விசாரணை படம் வெளியாகி, முதல் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் சேர்த்து 4.0 கோடி வசூல் செய்திருக்கிறதாம்.
முதலில் சுமார் 175 திரையரங்குகளில் வெளியான இப்படம் இப்போது திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தற்போது 215 திரை அரங்குகளாகியிருக்கிறது. இதற்கிடையில், மும்பையில் வரும் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 12) தேதி சப்-டைட்டிலுடன் விசாரணை வெளியாக இருக்கிறது.