தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சமந்தாவின் திரையுலக வாழ்க்கையில் இதற்கு முன் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்குமா என்று தெரியவில்லை. காலம் முழுக்க அவர் வருத்தப்படும் சம்பவம் ஒன்று நடந்துவிட்டது. அதை நினைத்து கோபப்படுவதா... வருத்தப்படுவதா என்று தெரியாமல் திணறிக்கொண்டிருக்கிறாராம் சமந்தா. என்ன விஷயம்?
விஜய் மில்டன் இயக்கத்தில் தேவயாணியின் காதல் கணவர் ராஜகுமாரனுக்கு ஜோடியாக நடிக்க சமந்தாவை அணுகியுள்ளனர். அது மட்டுமல்ல, ராஜகுமாரனுக்கு ஜோடியாக சமந்தா நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டார் என்ற செய்தியையும் படத்துறையில் கசிய விட்டுள்ளனர். கோலி சோடா படத்தைத் தொடர்ந்து விக்ரமை நாயகனாக வைத்து 10 எண்றதுக்குள்ள படத்தை இயக்கினார் இயக்குநர் விஜய் மில்டன். அந்தப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாதது மட்டுமில்லை மிகப்பெரிய தோல்விப்படமாகி விஜய் மில்டனை காலி பண்ணிவிட்டது.
10 எண்றதுக்குள்ள படத்தின் படு தோல்வி காரணமாக சின்ன பட்ஜெட்டில், டி.ராஜேந்தரை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டார். டி.ராஜேந்தர் முடியாது என மறுக்க அவரை வேண்டாம் என்று முடிவு செய்த விஜய்மில்டன், தேவயாணியின் காதல் கணவர் ராஜகுமாரனை தற்போது கதாநாயகனாக ஒப்பந்தம் செய்துள்ளார். இப்படத்தில் பரத் வில்லனாக நடிக்க இருக்கிறார். ஆனாலும் படம் பிசினஸ் ஆகாது என்று பலரும் பயமுறுத்தியதால் தன் இயக்கத்தில் 10 எண்றதுக்குள்ள படத்தில் கதாநாயகியாக நடித்த சமந்தாவை, இப்படத்தில் ராஜகுமாரனுக்கு நாயகியாக நடிக்க கேட்டிருக்கிறார் விஜய்மில்டன்.
அவர் இப்படி கேட்டதுமே தன் கோபத்தை மறைத்தபடி ஸாரி சொல்லிவிட்டாராம் சமந்தா. ஆனாலும், விஜய் மில்டன் கேட்டுக் கொண்டதால் இப்படத்தில் ராஜகுமாரனுக்கு ஜோடியாக நடிக்க சமந்தா ஒப்புக் கொண்டதாக செய்தி பரவிவிட்டது. "அப்படி ஒரு படத்தை நான் ஒப்புக் கொள்ளவே இல்லை" என்று தற்போது மறுப்பு தெரிவித்து வருகிறார் சமந்தா.