தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாளத்தில் 200 படங்களுக்கு மேல் நடித்திருப்பவர் கல்பனா. நடிகை ஊர்வசியின் அக்காவான இவர் கே.பாக்யராஜ் இயக்கிய சின்னவீடு படம் மூலம் தமிழுக்கு வந்தார். முதல் படத்திலேயே சிறப்பாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதைத்தொடர்ந்து திருமதி ஒரு வெகுமதி, சிந்துநதிப்பூ, சதிலீலாவதி என ஏராளமான படங்களில் நடித்தார். சிவகார்த்திகேயன் நடித்த காக்கி சட்டை படம்தான் தமிழில் அவர் நடித்து கடைசியாக வெளிவந்தது.
அதோடு, இட்லி என்ற படத்திலும் அவர் நடித்துக்கொண்டிருந்தார். அப்படத்தில் கோவை சரளா, கல்பனா, சரண்யா ஆகிய 3 பேரும் பாட்டிகளாக நடித்து வந்தனர். பெண்களுக்கு மெசேஜ் சொல்லும் வகையில் அந்த படம் உருவாகிக்கொண்டிருந்தது. ஆனால், எதிர்பாராதவிதமான சமீபத்தில் கல்பனா இறந்து விட்டதால் இட்லி படப்பிடிப்பு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. பாதி படத்திற்கு மேல் படமாக்கப்பட்டு விட்ட நிலையில், கல்பனா வேடத்திற்கு வேறொரு நடிகையை புக் பண்ணி அந்த கேரக்டருக்கான மொத்த காட்சிகளை ரீ-ஷுட் பண்ணலாமா? இல்லை பாதிக்குப்பிறகு வேறொரு நடிகையை நடிக்க வைக்கலாமா? என்பது குறித்து யோசித்துக்கொண்டிருக்கிறார்களாம்.