தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ்த் திரையுலகில் கடந்த ஆண்டு வெளிவந்த படங்களில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்ற படம் 'தனி ஒருவன்'. அந்தப் படத்திற்கு முன் ரீமேக் படங்களையே இயக்கி வந்த இயக்குனர் மோகன் ராஜா, சொந்தமாக ஒரு கதையை உருவாக்கி அதை பலரும் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு வெற்றிப் படமாக மாற்றினார். படம் வெளிவந்து வெற்றி பெற்ற உடனே மற்ற மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்க கடும் போட்டி நிலவியது. தெலுங்கில் இப்படத்தின் ரீமேக்கில் ராம் சரண் நடிக்க உள்ளார்.
தெலுங்குக்காக சில மாற்றங்களைச் செய்யலாம் என படத்தை இயக்க உள்ள சுரேந்தர் ரெட்டி கடந்த சில வாரங்களாக திரைக்கதையில் மாற்றங்களைச் செய்து சில புதிய காட்சிகளை உருவாக்கியுள்ளார். அவற்றைக் கேட்ட ராம் சரண், எந்த மாற்றமும் செய்ய வேண்டாம். ஒரிஜனலாக தமிழ்ப் படத்தில் என்ன இருந்ததோ அதை அப்படியே படமெடுங்கள் என்று இயக்குனரிடம் தெரிவித்துள்ளாராம். தெலுங்குக்காக மிகச் சிறிய சில மாற்றங்களை மட்டுமே செய்யலாம் எனக் கூறிவிட்டாராம்.
நாயகனுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே அளவிற்கு படத்தில் வில்லனுக்கும் முக்கியத்துவம் உண்டு. அதை ராம் சரண் ரசிகர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்று தெலுங்குத் திரையுலகினர் ராம் சரணின் முடிவைப் பற்றி கமெண்ட் அடித்து வருகிறார்களாம்.