டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மலையாளத்தில் வரும் பிப்-12ல் வெளியாக இருக்கும் 'புதிய நியமம்' படத்தில் மம்முட்டியும், நயன்தாராவும் மீண்டும் இணைந்து நடித்துள்ளார்கள் என்பது ஏற்கனவே தெரிந்த செய்தி தான். ஆனால் இந்தப்படத்தில் நயன்தாராவின் வாசுகி கதாபாத்திரம், படத்தின் ஹீரோவான மம்முட்டியின் லாயர் லூயிஸ் போத்தன் கேரக்டரை விட பவர்புல்லாக பின்னப்பட்டுள்ளது என படத்தின் இயக்குனர் ஏ.கே.சாஜன் சமீபத்தில் கூறியுள்ளார். இந்த காரணத்தாலேயே ஆரம்பத்தில் மம்முட்டிக்கு கதைசொல்ல போகவே பயந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த கதையின் நாயகனாக அவர் மனதில் வைத்திருந்தது இயக்குனரும் தற்போது குணச்சித்திர நடிகருமாக வலம் வரும் ரெஞ்சி பணிக்கரைத்தான்.. அதேபோல கதாநாயகி கேரக்டருக்கு, தற்போது துணை நடிகையாக நடித்துவரும் முத்துமணி என்பவரைத்தான் பிளான் பண்ணியிருந்தாராம். இந்த கதையை ரெஞ்சி பணிக்கரிடம் சொன்னபோது, ஐயா, இது மம்முட்டி நடிக்க வேண்டிய கதை, இதைப்போய் என்கிட்டே சொல்கிறேர்களே என கூறி அவரை மம்முட்டியிடம் கதை சொல்ல அனுப்பி வைத்தாராம். அதன்பின்னர் கதையில் இன்னும் மெருகு ஏற்றிய சாஜன், இருந்தாலும் தயங்கியபடியே தான் மம்முட்டியிடம் கதையை சொன்னாராம்.
கதையை கேட்ட உடனே மம்முட்டி சம்மதம் சொல்லிவிட, சாஜனுக்கு அதிர்ச்சி. சந்தேகத்துடனேயே மம்முட்டியிடம், “உங்களது கதாபாத்திரத்திற்கான நேரமும் வீரியமும் ஹீரோயினை விட குறைவாக இருக்கிறதே உங்களுக்கு முழு சம்மதமா” என இழுத்திருக்கிறார் சாஜன். அதற்கு மம்முட்டி சிரித்துக்கொண்டே, நான் மட்டுமே எப்போதும் ஸ்கிரீனில் தெரிந்துகொண்டே இருக்கவேண்டும் என நினைப்பவன் அல்ல நான்.. இந்த கதை நன்றாக இருக்கிறது.. அதனால் ஒப்புக்கொண்டேன் என கூறியதோடு, நாயகியின் கேரக்டர் பவர்புல் என்பதால் நயன்தாரா அதற்கு சரியாக இருப்பார் என ஆலோசனையும் சொல்லி அனுப்பினாராம்.