ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நீ வருவாய் என, விண்ணுக்கும் மண்ணுக்கும், காதலுடன், திருமதி தமிழ் ஆகிய படங்களை இயக்கியவர் ராஜகுமாரன். நடிகை தேவயானியின் கணவரான இவர், திருமதி தமிழ் படத்தில் நாயகனாகவும் நடித்தார். பின்னர் சந்தானம் நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் காமெடியனாக நடித்தார். அதைத் தொடர்ந்து இப்போது கோலிசோடா விஜய் மில்டன் இயக்கும் படத்தில் நாயகனாக நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்தில் பரத் வில்லனாக நடிக்கிறார்.
இந்நிலையில், ராஜகுமாரனை தொடர்பு கொண்டு விஜய்மில்டன் படத்தில் எந்த மாதிரியான ஹீரோவாக நடிக்கிறீர்கள்? என்று கேட்டால், விஜய் மில்டன் படத்தில் நான் ஹீரோவாக நடிக்கிறேன். மற்றபடி அது எந்த மாதிரியான ரோல், எந்தமாதிரியான படம் என்பது பற்றி என்னிடம் எதுவும் கேட்காதீர்கள். எதுவாக இருந்தாலும் டைரக்டரைக் கேட்டுக்கொள்ளுங்கள் என்கிறார்.
மேலும், நான் டைரக்சன் பண்ணும் படமாக இருந்தால் தைரியமாக சொல்லி விடுவேன். ஆனால் இது நான் நடிக்கிற படம். அதனால் அதைப்பற்றி நான் எதுவும் சொல்லக்கூடாது. சொன்னால் தவறாகி விடும் என்கிறார். அவரிடத்தில், டி.ராஜேந்தர் நடிக்கயிருந்த வேடத்தில் இப்போது நீங்கள் நடிப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்றதற்கு, டி.ஆர் நடிக்கயிருந்த விசயமே நீங்கள் சொல்லித்தான் எனக்கே தெரிகிறது என்கிறார் ராஜகுமாரன்.