மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடிப்பில் ஜனவரி 14-ந்தேதி வெளியான படம் கதகளி. சுசீந்திரன் இயக்கத்தில் நடித்த பாயும்புலி அதிர்ச்சி தோல்வி கொடுத்ததால் இந்த படம் தனக்கு கைகொடுக்கும் என்ற எதிர்பார்த்தார் விஷால். ஆனால் இந்த படமும் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. இருப்பினும், தெலுங்கில் வெற்றி பெறும் என்று நம்புகிறாராம் விஷால்.
மேலும், தமிழில் வெளியான அதே நாளில் ஆந்திராவிலும் வெளியிட வேண்டும் என்று முதலில் திட்டமிட்டிருந்தார். ஆனால் தியேட்டர் பிரச்சினையால் ஒருவாரம் தள்ளி வைக்க முடிவெடுத்த நிலையில், கடந்த வாரம் அங்கு 4 தெலுங்கு படங்கள் ஒரே நாளில் வெளியானது. அதனால் ரிலீஸ் தேதியை வருகிற 12-ந்தேதிக்கு மாற்றி விட்டார்களாம்.
அதோடு, அப்பட நாயகி கேத்ரின் தெரசாவுக்கு தெலுங்கில் ஒரு ரசிகர் வட்டம் இருப்பதால் அதிகபட்சமாக 300 தியேட்டர்களில் கதகளியை வெளியிடும் முயற்சிகளும் நடந்தது. ஆனால் அந்த அளவுக்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லையாம். தற்போதைய நிலவரப்படி 210 தியேட்டர்கள் ஓகேவாகி விட்டதாம். அதனால், பிப்ரவரி 12-ந்தேதி கதகளி ஆந்திராவில் வெளியாவது உறுதியாகி விட்டதாக சொல்கிறார்கள்.