'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
டோலிவுட்டின் மெகா ஸ்டார் குடும்ப நடிகர்கள் தற்போது ரீமேக் கதைகளை நாட துவங்கி விட்டனர். மெகா ஸ்டார் சிரஞ்சீவி கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவுள்ளார். அவரது மகன் மெகா பவர் ஸ்டார் ராம் சரண் தமிழில் வெற்றி பெற்ற தனி ஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க தயாராகிவிட்டார். சிரஞ்சீவியின் தம்பியும் பிரபல நடிகருமான பவர் ஸ்டார் பவன் கல்யாண் அஜித் நடிப்பில் வெற்றி பெற்ற வீரம் அல்லது வேதாளம் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய முயற்சி செய்து வருகின்றார்.
இந்நிலையில் மெகா ஸடார் குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு இளம் நடிகர் சாய் தரண் தேஜ், கன்னட வெற்றிப்படமான மிஸ்டர்-மிஸ்ட்ரஸ் ராமாச்சாரி படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம். அதற்கான பேச்சு வார்த்தையிலும் சாய் தரண் ஈடுபட்டுள்ளாராம். டிக்கா, சுப்ரீம் போன்ற படங்களில் நடித்து வரும் சாய் தரண் அப்படங்களை முடித்த பின்னர் மிஸ்டர்&மிஸ்ட்ரஸ் ராமாச்சாரி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிப்பார் என கூறப்படுகின்றது.