10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு |
ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா மற்றும் பலர் நடித்துள்ள போக்கிரி ராஜா படத்தின் அத்துவுட்டா அத்துவுட்டா' என்ற சிங்கிள் டிராக் வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது.
டி.ராஜேந்தர்தான் நேற்றைய நிகழ்வின் தலைமைப் பேச்சாளர். இந்த விழாவிற்கு அவர் வருவது தெரியாது என்று படத்தின் நாயகன் ஜீவாவும், ஹன்சிகாவும் தெரிவித்தார்கள். ஹன்சிகாவும், டிஆரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்வார்களா, அப்படியே சந்தித்தாலும் பேசிக் கொள்வார்களா என ஒட்டு மொத்த மீடியாவும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தது.
டி.ஆர் வந்ததுமே முன் வரிசையில் அமர்ந்திருந்த ஹன்சிகாவைப் பார்த்து வணக்கம் சொன்னார், பதிலுக்கு ஹன்சிகாவும் வணக்கம் சொன்னார். மேடையில் அமர டிஆரை அழைத்து போது ஹன்சிகாவுக்குப் பக்கத்திலேயே ஒரு சீட் காலியாக இருந்தது. இருந்தாலும் அந்த சீட்டில் உட்காராமல் ஒரு சீட் தள்ளியே உட்கார்ந்தார் டி.ஆர்.
தன்னுடைய பேச்சின் போது ஹன்சிகாவைப் பற்றி என்ன பேசப் போகிறாரோ என்று பார்த்த போது யாரும் எதிர்பாராத விதமாக அவரைப் பாராட்டித் தள்ளிவிட்டார். “வாலு' படத்தை பல தடங்கல்களுக்குப் பிறகு நானே வெளியிட்டேன். அந்தப் படத்திற்காக தாறுமாறு என்ற பாடல் படமாக்க வேண்டியிருந்தது. நாங்கள் கேட்டதும் அவர் எந்த மறுப்பும் சொல்லாமல் வந்து நடித்துக் கொடுத்தார். அதற்காக அவர் தனி சம்பளம் கூடக் கேட்கவில்லை. யார் கேட்டது, டி.ஆர். அங்கிளா கேட்டார் என்று மட்டும் கேட்டுவிட்டு வந்து நடித்துக் கொடுத்தார். அப்படிப்பட்ட ஒரு குழந்தை மனம் கொண்டவர் ஹன்சிகா. உடனே, நான் வேறு யாரையோ பற்றிக் குறிப்பிட்டுப் பேசுகிறேன் என எழுதிவிடாதீர்கள், என்றார்.
டி.ஆர். அப்படி சொல்லவில்லை என்றாலும் கூட அவர் நயன்தாராவுடன் ஹன்சிகாவை ஒப்பிட்டுப் பேசுகிறார் என்று குழந்தை கூட சொல்லிவிடும். ஆக, 'இது நம்ம ஆளு' படத்தின் எந்த ஒரு பிரமோஷனுக்கும் நயன்தாரா தப்பித் தவறி கூட வந்துவிடமாட்டார் என்பது மட்டும் உண்மை.