ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
திரையுலகத்தைப் பொறுத்தவரை முன்னணி நட்சத்திரங்களை வைத்துப் படம் ஒன்றைத் தயாரித்தால் அதற்கு முதலீடே தேவையில்லை. வினியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் அவர்களாகவே வந்து படம் தயாரிக்கத் தேவைப்படும் பட்ஜெட்டை அட்வான்ஸாகக் கொடுத்துவிட்டுப் போய் விடுவார்கள். 80, 90களில் ரஜினிகாந்த் நடித்த பல படங்கள் அப்படித் தயாரானதுண்டு. அந்தக் காலத்தில் அப்படி ஒரு நிலைமை இருந்தது என்று இன்று பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற 'பாகுபலி' படத்திற்கு தற்போது அப்படியொரு நிலைமை வந்துள்ளது.
தமிழ், தெலுங்கில் நேரடியாகத் தயாரிக்கப்பட்டும் ஹிந்தி உட்பட பல மொழிகளில் டப்பிங் செய்தும் 'பாகுபலி' வெளியிடப்பட்டது. தமிழில் சுமார் 50 கோடியும், தெலுங்கில் சுமார் 100 கோடியும் வசூலித்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு 50 சதவீதமே முடிந்துள்ள நிலையில் இப்போதே படத்திற்கான வியாபாரமும் மறுபக்கம் நடந்து வருகிறதாம். ஹிந்தியில் டப்பிங் செய்து வெளியிட பிரபல நிறுவனம் ஒன்று சுமார் 150 கோடி ரூபாயை தங்களுடைய விலையாகச் சொல்லியிருக்கிறார்களாம். இந்தத் தொகையை மட்டும் வாங்கினால் கூட போதும் 'பாகுபலி 2' படத்தின் படப்பிடிப்பை முடித்துவிடலாம் என்கிறார்கள்.
அப்படியென்றால் மற்ற வியாபாரத்தையும் சேர்த்தால் 'பாகுபலி 2' படத்தின் வியாபாரம் மட்டுமே 500 கோடியைத் தாண்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.