டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மலையாள சினிமாவில் பிரபல வில்லன் பீமன் ரகு. 300க்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாகவே நடித்துள்ளார். அவர் நிஜ வாழ்க்கையிலும் வில்லனாக நடந்து கொண்டதால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பீமன் ரகு தனது நண்பர்களுடன் காரில் திருவனந்தபுரத்தை சுற்றி வந்தார். அப்போது ஒரு ஐஸ் கிரீம் கடையின் முன் காரை நிறுத்திவிட்டு கடைக்காரரிடம் ஐஸ் கிரீம் கொண்டு வரச் சொன்னார். கடைக்கு வெளியே ஐஸ் கிரீம் சப்ளை செய்யும் வழக்கம் அந்தக் கடைக்கு இல்லை. இதனை அவரிடம் கடைக்காரர் கூறியிருக்கிறார். வந்திருப்பவர் சினிமா நடிகர் என்பதால் விதியை தளர்த்தி கடைக்காரர் காருக்கு ஐஸ்கிரீம் கொண்டு சென்று கொடுத்திருக்கிறார். பீமன் ரகு மீண்டும் மீண்டும் கொண்டு வரச் சொன்னதால் கடைக்காரர் மறுத்திருக்கிறார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பீமன் ரகுவும், அவரது நண்பரும் கடைக்காரர் ஸ்ரீஜேசை கடுமையாக தாக்கிவிட்டுச் சென்று விட்டனர். படுகாயம் அடைந்த கடைக்காரர் ஸ்ரீஜேஸ் மருத்துவமனையி சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் வட்டியூர்காவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதைத் தொடர்ந்து போலீசார், பீமன் ரகு மற்றும் அவரது நண்பர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.