டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கௌதம் மேனன் முன்னைவிட தற்போது சுறுசுறுப்பாகிவிட்டார். தற்போது அச்சம் என்பது மடமையடா படத்தை இயக்கி வரும் கௌதம் மேனன் அடுத்து ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கவிருக்கிறார். அதில் ஒரு படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்கிறார். கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இன்னொரு படத்திற்கான ஹீரோவாக தனுஷ் நடிப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது!
கௌதமுடன் முதல்முறையாக தனுஷ் இணையவிருக்கும் இப்படத்திற்கு 'என்மேல் பாயும் தோட்டா' என்ற தலைப்பை சூட்ட இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, கௌதம் மேனன் தயாரித்த நீ தானே பொன் வசந்தம் உட்பட பல படங்கள் தோல்வியடைந்ததால் தயாரிப்பாளராக கடும் பண நெருக்கடியில் இருந்து வந்தார் கௌதம் மேனன். அதன் காரணமாகவே ஏம்.எம்.ரத்னத்துக்கு 'என்னை அறிந்தால்' படத்தை இயக்கினார்.
இந்நிலையில், லைகா புரடக்ஷன்ஸ் நிறுவனம் தான் கௌதம் மேனனுக்கு பெரும் தொகையை பைனான்ஸாக கொடுத்துள்ளதாம். அந்தப் பணத்தை வைத்தே ஜெயம் ரவி, தனுஷ் ஆகியோருக்கு பெரும் சம்பளம் கொடுத்து அவர்களை கமிட் பண்ணியுள்ளாராம் கௌதம் என கோலிவுட்டில் பேசிக்கொள்கிறார்கள்.