பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மாயா, தனி ஒருவன், நானும் ரௌடிதான் ஆகிய படங்கள் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து நயன்தாரா தற்போது இரண்டரை கோடி சம்பளம் வாங்குவதாக படத்துறையில் தகவல் அடிபடுகிறது. ஆனால் நயன்தாராவை வைத்து படம் எடுப்பவர்களில் பலர் சின்ன தயாரிப்பாளர்களாகவும் இருப்பதுதான் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. உதாணரமாக, மஞ்சப்பை படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறிய களவானி பட இயக்குனர் சற்குணம் தற்போது நயன்தாராவை கதாநாயகியாக வைத்து ஒரு படத்தை தயாரிக்கிறார்.
சற்குணத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய தாஸ் ராமசாமி இப்படத்தை இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் நயன்தாராவுடன் தம்பி ராமையா, ஹரிஷ் உத்தமன் ஆகியோரும் நடிக்கிறார்கள். நகைச்சுவை கலந்த திகிலூட்டும் கிரைம் த்ரில்லர் படமாக இப்படம் உருவாகவிருக்கிறது. விவேக் மெர்வின் இசை அமைக்கும் இப்படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படம் குறித்த செய்தி வெளியானபோது, நயன்தாராவுக்கு இரண்டரை கோடி சம்பளம் கொடுத்து படம் தயாரிக்கும் அளவுக்கு சற்குணம் பெரிய தயாரிப்பாளராகிவிட்டாரா? என்ற கேள்வி திரையுலகில் பல மட்டத்திலும் கேட்கப்பட்டது. இந்தக் கேள்விக்கான விடை தற்போது தெரிய வந்துள்ளது. அதாவது, நயன்தாராவை வைத்து சற்குணம் தயாரித்தாலும் அந்த படத்தின் அதிகாரபூர்வ தயாரிப்பாளர் அவர் இல்லையாம்.
ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் லைன் புரட்யூசராக இருந்த இந்தப் படத்தை தயாரித்துக் கொடுப்பதுதான் சற்குணம். நயன்தாராவின் சம்பளம் உட்பட, அந்தப் படத்தில் பல கோடி முதலீடு படத்தைத் தயாரிப்பது... பிரபல பைனான்சியர்களான நேமிசந்த் ஜபக், ஹித்தேஷ் ஜபக் இருவரும்தான்.