தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ரஜினி முருகன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு பத்திரிகையாளர்களின் தொடர்பு எல்லைக்குள் சிவகார்த்திகேயன் வருவதில்லையாம். அது கூடப் பரவாயில்லை, அவரை வைத்து படத்தைத் தயாரித்த லிங்குசாமியின் தொடர்பு எல்லைக்குள் கூட அவர் வருவதில்லையாம். 'ரஜினி முருகன்' படத்தின் வெற்றிக்கு மீடியாக்களும் ஒரு முக்கிய காரணம். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தங்களது படத்திற்கு வெற்றி கிடைக்க காரணமாக இருந்த பத்திரிகையளார்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்க ஆசைப்பட்டாராம் லிங்குசாமி.
ஆனால், சிவகார்த்திகேயனைத் தொடர்பு கொண்டு பேசிய போது அதற்கெல்லாம் வர முடியாது என மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. பட வெளியீடு தொடர்பாக ஏற்கெனவே இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்ல கடைசி நேரத்தில் சிவகார்த்திகேயனிடம் இருந்தும் சில பல கோடிகளை வாங்கித்தான் படத்தை வெளியிட்டுள்ளார்கள். படம் வெளியான அன்று சில பத்திரிகையாளர்களிடம் மட்டும் சிவகார்த்தியேன் இந்தப் படத்தில் என்னுடைய சம்பளம் மைனஸ் 50 லட்சம் என்று மட்டும் சொல்லியிருக்கிறார்.
படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் இல்லாமல் பத்திரிகையாளர்களைச் சந்தித்து எப்படி நன்றி சொல்வது என்று அந்த திட்டத்தையே கைவிட்டு விட்டாராம் லிங்குசாமி. பட வெளியீட்டிற்கு முன் மோதிக் கொள்பவர்கள், படம் வெற்றியடைந்ததும் நண்பர்களாகிவிடுவதுதான் சினிமாவில் வழக்கம். ஆனால், லிங்குசாமி - சிவகார்த்திகேயன் விவகாரத்தில் எந்த சாமி வந்தாலும் ஒன்றும் நடக்காது என்கிறார்கள். 'ரஜினி முருகன்' வெற்றியை சிவகார்த்திகேயன் இதயத்தில் வைத்துக் கொள்வதுதான் நல்லது, அதையே தலையில் ஏற்றிக் கொண்டால் என்ன ஆவது என்று கோலிவுட்டில் சிலர் புகைகிறார்களாம்.