ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தான் செய்யும் செயல்கள் மூலம் சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட அளவிலான மக்களிடமாவது அந்த செயல் குறித்த விழிப்புணர்வு ஏற்படும் என தெரிந்தால் தயங்காமல் அதில் இறங்கிவிடுவார் மோகன்லால். கடந்த சில மாதங்களுக்கு முன் அநாதை சிறுவர்கள் இல்லத்திற்கு சென்ற மோகன்லால் அங்கிருந்த குழந்தைகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கி அவர்களை மகிழ்வித்தார். இப்போது சில தினங்களுக்கு முன் திருவனந்தரபுரத்தில் உள்ள பூஜப்புரா பெண்கள் முதியோர் இல்லத்திற்கு சென்று அங்கிருந்த 45 தாய்மார்களுக்கு புடவை உள்ளிட்ட துணிகளை வழங்கி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
'அவருக்காய் நமக்கு வாங்காம்' என்கிற நிகழ்ச்சிக்காக கிராண்ட் கேரளா ஷாப்பிங் பெஸ்டிவல் சீசன்-9 உடன் மோகன்லாலும் இணைந்து இந்த உதவியை செய்துள்ளார்கள்.. முதியோர் இல்லத்தில் இருந்த தாய்மார்களுடன் நிறைய நேரம் செலவிட்ட மோகன்லால், அங்கே தனது தாயின் பெருமைகளையும் அவர்களிடம் பகிர்ந்துகொண்டதோடு தற்போது அவர் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் படுத்தபடி சிகிச்சை பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அங்குள்ள தாய்மார்களை பார்க்கும்போது தனது தாயை பார்க்கும் உணர்வே ஏற்பட்டது என்றும் அவர்களிடம் கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறித்து மோகன்லாலிடம் கேட்டபோது, “இன்றைய நாகரிக, அவசர உலகில், பெரியவர்களை உதாசீனப்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்த சமயத்தில் இதுபோன்ற நிகழ்ச்சி தேவையான ஒன்றுதான்.. நமக்காக சிலவற்றை செய்யும்போது கிடைக்கும் சந்தோஷத்தை விட மற்றவர்களுக்காக சிறிய அளவில் உதவி செய்தாலும் அதில் கிடைக்கும் சந்தோசம் அளவற்றது.. இதை பார்க்கும் மற்றவர்களும் இவர்கள் போன்றவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டவேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்” என கூறியுள்ளார் மோகன்லால்.