ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இளம் இயக்குநர்கள் செம உஷார் பார்ட்டிகளாக இருக்கிறார்கள். தன்னுடைய படம் ஓடினால்தான் அடுத்தப் படம் கிடைக்கும் என்பதை மட்டுமல்ல, தனக்குக் கிடைக்கும் வெற்றியை உடனடியாக பணம் பண்ணுவது எப்படி என்பதையும் நன்கு தெரிந்து வைத்துள்ளனர். இப்படிப்பட்ட உஷார் பார்ட்டி இயக்குநர்களின் அட்லியும் ஒருவர்.
கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், இயக்குநர் மகேந்திரன் நடிக்கும் தெறி படத்தை இயக்கி வருகிறார் அட்லி. தெறி படத்தின் இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் டீஸர் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டு யூ-டியூப்பில் இந்திய அளவில் மிகப்பெரும் சாதனை படைத்து வருகிறது.
ஏப்ரல் 14 ஆம் தேதி இப்படத்தை வெளியிட உள்ளனர். தெறி படத்தின் பின்னணி இசை சேர்ப்பு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. அதற்கு முன்னதாக எடிட்டிங், டப்பிங் பணிகள் நடைபெற்றபோது தெறி படம் குறித்த ரகசியம் ஒன்று வெளியாகி உள்ளது.
அதாவது தெறி படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என்பதை ரசிகர்களுக்கு சொல்லும் வகையில், தெறி இரண்டாம் பாகத்தில் சந்திப்போம் (Meet you in THERI 2) என்ற வாசகத்துடன் தெறி படம் முடிவடைகிறதாம்.
தெறி முதல் பாகத்தைப் போலவே, இரண்டாம் பாகத்திலும் விஜய், மீனாவின் மகள் நைனிகா, ஏமி ஜாக்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடிக்க போவதாக கதையை முடித்திருக்கிறாராம் அட்லி.