'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தனி ஒருவன் படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடித்து வரும் படம் மிருதன். சக்தி செளந்தர ராஜன் இயக்கத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்துள்ள இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்திருக்கிறார். ஐங்கரன் இண்டர்நேஷ்னல் பட நிறுவனம் மிருதன் படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளது. பிப்ரவரி 12ம் தேதி மிருதன் படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தனர். அதற்கு முன்னதாக தணிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மிருதன் படத்துக்கு தணிக்கையில் ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
இத்தனைக்கும் படத்தில் வன்முறை இல்லை... ஆபாசம் இல்லை. ஜாம்பி வகைப்படம் என்பதற்காகவே ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதாக தணிக்கைக்குழு தரப்பில் சொல்லப்பட, ரிவைசிங் கமிட்டிக்கு செல்வதாக அறிவித்தது படக்குழு. பொதுவாக பேய்ப் படங்களுக்குத்தான் ஏ அல்லது யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்படுகிறது. மிருதன் படமோ ஜாம்பி வகைப்படம். இதையும் பேய்ப்படம் என்று வகைப்படுத்தி ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதில் ஒரேயொரு ஆறுதல் படத்தின் எந்தக் காட்சியையும் சென்சார் அதிகாரிகள் தடைசெய்யவில்லை என்பதுதான். தற்போதைய தகவலின்படி... ரிவைசிங் சென்றாலும் யுஏ சான்றிதழ் வழங்கப்படவே வாய்ப்பிருக்கிறது. அதனால் பயன் ஒன்றும் இல்லை என்பதால் ஏ சான்றிதழ் உடன் பிப்ரவரி 19 அன்று மிருதன் படத்தை உலகமெங்கும் வெளியிட முடிவு செய்துள்ளனர்.