டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு மாதவன் மீண்டும் தமிழில் நடித்து கடந்த மாதம் 29ம் தேதி வெளிவந்த படம் 'இறுதிச் சுற்று'. கிளாமரோ, குத்துப் பாடல்களோ, சிரிப்பே வராத நகைச்சுவைக் காட்சிகளோ இல்லாமல் வெளிவந்த படம். தமிழ் ரசிகர்கள் இந்தப் படத்தை எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு படம் வெளிவருவதற்கு முன்பு வரை இருந்தது. ஆனால், படம் வெளியான முதல் காட்சியிலேயே இறுதிச் சுற்றின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. இருந்தாலும் இந்தப் படம் ஏ சென்டர்களில் மட்டும்தான் ஓடும் பி அன்ட் சி சென்டர்களில் அவ்வளவாக ஓடாது என்றும் சிலர் சொன்னார்கள்.
ஆனால், பலரது ஆரூடத்தையும் மீறி இந்தப் படம் அனைத்து சென்டர்களிலும் கடந்த பத்து நாட்களாக நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த பத்து நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் இந்தப் படம் 11 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக கோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு படத்தின் வெற்றிக்குக் கதைதான் முக்கியம் என்பதை இந்தப் படம் மீண்டும் நிரூபித்துள்ளது. மாதவன், அறிமுக நடிகை ரித்திகா சிங் ஆகியோரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. வழக்கமான தமிழ் சினிமாவிலிருந்து மாறுபட்ட படமாக அமைந்துள்ள இந்தப் படம் திரையுலகினர் பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. பிப்ரவரி 5ம் தேதி வெளிவந்த படங்கள் கூட இந்தப் படத்துக்குப் போட்டியாக அமைய முடியாமல் படம் நல்ல வரவேற்புடன் ஓடிக் கெண்டிருக்கிறது என வினியோக வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.