பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி படத்தில் இசையமைப்பாளரானவர் சுந்தர் சிபாபு. அந்த படத்தில் அவரது இசையில் உருவான வாளமீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் -என்ற பாடல் சூப்பர் ஹிட்டானது. அதையடுத்து அஞ்சாதே, நாடோடிகள், சிந்து சமவெளி, விருதகிரி, போராளி என பல படங்களுக்கு இசையமைத்து வேகமாக வளர்ந்து கொண்டிருந்தார். ஆனால் திடீரென்று அவரது தாயார் இறந்து விட்டதை அடுத்து அவர் எந்த படங்களுக்கும் இசையமைக்கவில்லை.
ஆனால் சில வருடங்களுக்குப்பிறகு தனக்கு பிரிநிதா என்ற மகள் பிறந்ததை அடுத்து, என் அம்மாவே பிறந்து வந்தது போல் உள்ளது என்று உற்சாக மடைந்து மீண்டும் அட்டி படத்திலிருந்து தனது இசைப்பயணத்தைத் தொடங்கி விட்டார். இந்த படத்தில் அவரது பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியிருப்பதால் மேலும் சில புதிய படங்களுக்கு இசையமைக்கவும் பேசிக்கொண்டிருக்கும் சுந்தர் சி பாபு, அட்டி படத்திற்கு இசையமைத்திருப்பதோடு, அந்த படத்தை தானே வாங்கியும் வெளியிடுகிறார்.