ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? |
நேரம், ஜிகர்தண்டா படங்களில் வில்லனாக நடித்தவர் பாபி சிம்ஹா. அந்த இரண்டு படங்களுமே வெற்றி பெற்றதோடு பாபி சிம்ஹாவின் நடிப்பும் பேசப்பட்டது. இதில் ஜிகர்தண்டாவுக்காக சிறந்த வில்லனுக்கான தேசிய விருதும் பெற்றார். ஆனபோதும், அதையடுத்து அவர் வில்லன் பயணத்தை தொடரவில்லை. உடனடியாக ஹீரோவாகி விட்டார். ரசிகர்கள் தன்னை வில்லனாகத்தான் அங்கீகரித்தார்கள் என்றபோதும், ஹீரோ ஆசையில் பல படங்களில் கமிட்டாகி நடித்துக்கொண்டிருக்கிறார்.
ஆனால் அப்படி அவர் நாயகனாக நடித்து வெளியான மசாலாப்படம், உறுமீன், பெங்களூர் நாட்கள் என பல படங்கள் வெளியாகி விட்டன. ஆனால் எந்த படத்திலும் அவரது நடிப்பு பெரிதாக பேசப்படவில்லை. இதையடுத்து பாபி சிம்ஹாவின் அபிமானிகள், உங்களுக்கு பாசிட்டீவை விட நெகடீவ் ரோல்கள்தான் நன்றாக ஒர்க்அவுட்டாகிறது. அதனால், ஹீரோவாக நடித்தாலும் நெகடீவ் கலந்த கதைகளில் நடியுங்கள் என்று கேட்டுக்கொள்கிறார்களாம்.
இதுவரை அப்படி நடிப்பது பற்றி யோசிக்காத பாபி சிம்ஹா, இப்போது நெகடீவ் ரோலில் தான் நடித்து பேசப்பட்ட படங்களை அசைபோட்டு பார்த்துக்கொண்டி ருக்கிறாராம். ஆக, விரைவில் பாபி சிம்ஹாவை அதிரடி ஹீரோவாக திரையில் பார்க்கலாம் என்று தெரிகிறது.