ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் |
குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடிக்கத் தொடங்கி இப்போது கதாநாயகியாக வளர்ந்து நிற்பவர் கீர்த்தி சுரேஷ். மலையாளத்தில் அவருக்கு ஹிட் கிடைக்காதபோதும் தமிழ், தெலுங்கில் ஹிட் கிடைத்திருப்பதால் இப்போது கவனிக்கப்படும் நடிகையாகி விட்டார். அதோடு, மீடியம் பட்ஜெட் பட நிறு வனங்கள் அவரிடம் போட்டி போட்டு கால்சீட் பேசி வருகின்றனர். அதனால் பிசியாக நடித்துக்கொண்டே புதிய கதைகளும் கேட்டு வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
மேலும், சில நடிகர், நடிகைகளைப்போன்று தன்னுடன் பலரை உட்கார வைத்துக்கொண்டு கதை கேட்பது. பின்னர் அனைவரும் ஒன்றுகூடி எந்த கதையில் நடிப்பது என முடிவெடுப்பது என்றெல்லாம் செய்வதில்லையாம் கீர்த்தி. டைரக்டர்களிடம் கதை கேட்கும்போது தனது அம்மா மேனகாவை கூட உடன் வைத்துக்கொள்ளாமல் தான் மட்டுமே சிங்கிளாக கதை கேட்டு, அதில் பிடித்தமான கதையை ஓகே செய்கிறாராம்.
அதேசமயம், ஒரு கதையை தான் ஓகே செய்த பிறகு அந்த ஸ்கிரிப்ட்டில் என்னென்ன அழுத்தமான காட்சிகள் உள்ளது என்பதை சம்பந்தப்பட்ட பட டைரக்டரிடம் கேட்டுக்கொண்டு அதில் எந்த மாதிரியான பர்பாமென்ஸ் கொடுக்கலாம் என்பது பற்றி மட்டும் தனது தாய்குலத்திடம் கலந்து பேசிக்கொள்வாராம் கீர்த்தி சுரேஷ். முன்பெல்லாம் அம்மாவிடம் டியூசன் போன்று நடிப்பு கற்ற அவர், இப்போது ஜஸ்ட் கேட்பதோடு சரியாம். அதை உள்வாங்கிக்கொண்டு ஸ்பாட்டில் வந்து சிங்கிள் டேக்கில் ஓகே செய்து விடுகிறாராம் கீர்த்தி சுரேஷ்.