மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
திரையுலக நட்சத்திரங்கள் பங்கு பெறும் 'செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்' என்று அழைக்கப்படும் சிசிஎல் கிரிக்கெட் போட்டியில் இந்த ஆண்டு இதுவரை நடைபெற்ற மூன்று லீக் ஆட்டங்களிலும் படு தோல்வியடைந்து போட்டியை விட்டே வெளியேறியுள்ளது சென்னை ரைனோஸ் அணி. நாசர், விஷால் தலைமையில் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற அமைப்பு ஆணித் தரமாக தங்களது வேலைகளை ஆரம்பித்துள்ள நிலையில் இந்த கிரிக்கெட் தோல்வி கவனிக்க வேண்டிய ஒன்றாகிவிட்டது.
விஷால் கிரிக்கெட் ஆடாமல் அணியிலிருந்து விலகினார். அதற்கடுத்து ஜீவாவை கேப்டனாக நியமித்தார்கள். ஆனால், அவர் தலைமையில் ஆட முடியாதென விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் தெரிவித்தாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் ஆர்யாவை கேப்டனாக நியமித்தார்கள். எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு சென்னை ரைனோஸ் டீமிற்குள் அரசியல் புகுந்தது. கேரளாவில் நடைபெற்ற ஆட்டத்தின் போது ஸ்ரீப்ரியா, சென்னை அணிக்கு ஒரு தமிழனைக் கூடவா கேப்டனாக நியமிக்க முடியவில்லையா என்ற கேள்வியை எழுப்பினார்.
2011ல் ஆரம்பமான இந்த செலிபிரிட்டி கிரிக்கெட் போட்டியில் முதல் மற்றும் இரண்டாவது ஆண்டுகளில் சென்னை ரைனோஸ் அணிதான் சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆனால், இந்த 6வது சீசனில் அடுத்த கட்ட போட்டிக்குக் கூடப் போக முடியாமல் பரிதாபகரமான தோல்வி அடைந்தது. இதற்குக் காரணம் அணி வீரர்களுக்குள் ஏற்பட்ட அரசியல்தான் என விஷயமறிந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.