இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தென்னிந்திய நடிகர்சங்கத்திற்கு கடந்த அக்டோபர் 18ந் தேதி தேர்தல் நடந்தது. இதில் தலைவராக நாசர், செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி உள்ளிட்ட விஷால் தலைமையிலான அணியினர் மகத்தான வெற்றி பெற்றனர். தேர்தல் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடந்ததால், உயர்நீதி மன்றம் ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை தேர்தல் அதிகாரியாக நியமித்து தேர்தலை நடத்தியது.
தேர்தல் முடிந்த பிறகும் தேர்தல் வாக்குசீட்டுகள், தேர்தல் சம்பந்தமான ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வந்தது. தேர்தலை எதிர்த்து வழக்கு போடுகிறவர்கள் 3 மாதத்திற்குள் வழக்கு போடலாம் என்பது சட்டவிதி. இதுவரை யாரும் வழக்கு எதுவும் போடாததால் சட்டவிதிகளின்படி தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குச்சீட்டுகள், அது தொடர்பான ஆவணங்களை தேர்தல் அதிகாரியான முன்னாள் நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் நேற்று நடிகர் சங்க வளாகத்தில் தீயிட்டுக் கொழுத்தப்பட்டது. நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பொன்வண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.