டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கடந்த வியாழன் அன்று நிவின்பாலி போலீஸ் அதிகாரியாக நடித்து மலையாளத்தில் வெளியான 'ஆக்சன் ஹீரோ பிஜூ' படத்திற்கு வரவேற்பு நன்றாக இருந்தாலும் நிவின்பாலிக்கென உள்ள ரசிகர்களிடம் இருதரப்பு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமான போலீஸ் படங்களை போல இல்லாமல் இதனை புதியபாணியில் எடுத்திருக்கிறார் இயக்குனர் அப்ரிட் ஷைன்.. போலீஸ் சப் இன்ஸ்பெக்டரான நிவின்பாலி தனது அதிகாரத்திற்கும் உடல் பலத்திற்கும் உட்பட்டு தன்னிடம் தினசரி வரும் வழக்குகளை எப்படி டீல் செய்கிறார் என்பதைகூட கொஞ்சம் விறுவிறுப்பாகத்தான் சொல்லியிருக்கிறார்.
தான் எதையும் வித்தியாசமாக செய்யக்கூடியவர் என்பதை தனது முதல் படமான '1983' படத்திலேயே காட்டியிருந்தார் அப்ரிட் ஷைன்.. கிரிக்கெட்டை மையப்படுத்திய அந்தப்படத்தில் ஹீரோ போராடி இந்திய அணியில் இடம்பெற்று ஜெயிப்பதுபோல வழக்கமான பாணியில் இல்லாமல் கிரிக்கெட் கனவுகளில் தோற்றுப்போன இளைஞன் ஒருவன், தனது மகனுக்கு சிறுவயதிலேயே கிரிக்கெட் ஆர்வம் இருப்பதை கண்டுபிடித்து அவன் எதிர்காலத்தை கிரிக்கெட்டை நோக்கி திருப்புவதை தனது லட்சியமாக கொள்கிறான் என்பதாக கதை சொல்லியிருந்தார் அப்ரிட் ஷைன்.. அதனால் தான் அந்தப்படத்திற்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்து படமும் வெற்றி அடைந்தது.
அதேபோல இந்தப்படத்தில் நிவின்பாலி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்றதும் வழக்கமான மலையாள மசாலா பாணியிலான அதிரடி போலீஸ் படமாக இதுவும் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். இதை முன்கூட்டியே கணித்த இயக்குனர் அப்ரிட் ஷைன், படத்தை ஆரம்பித்த நாள் முதல் படம் ரிலீஸாவதற்கு முதல் நாள் வரை “இது நீங்கள் நினைக்கிற மாதிரி' மாஸ் போலீஸ் படம் இல்லை என்பதை தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருந்தார். படமும் அந்த அளவுக்கு குறைசொல்லும்படியாக எல்லாம் இல்லை என சில ரசிகர்களும் வழக்கமான அதிரடி போலீஸ் பாணியில் படமாக்கி இருக்கலாமே என ஆதங்கத்தில் சில ரசிகர்களும் சொல்லி வருகிறார்கள். அவ்வளவுதான்.