ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஜெயமான நடிகர் எப்போதுமே ஹீரோக்களின் நடிகர். அவரை வைத்து படமெடுத்த பெரும்பாலான இயக்குனர்கள், அவரை மாதிரி நடிகரை பார்க்க முடியாது. டைரக்டர்கள் கிழித்த கோட்டை தாண்டாத ஹீரோன்னா இவர் மட்டும்தான் என்று மார்தட்டும் அளவுக்கு நல்ல பெயர் எடுத்துள்ளார் நடிகர்.
அதேமாதிரிதான் தயாரிப்பாளர்களிடமும் இருந்து வந்தார் நடிகர். ஆனால் இப்போது கைமீறி நிற்கிறாராம். அதாவது, முன்பு கொடுத்தை வாங்கிக்கொண்டு நடித்த நடிகர், இப்போது தயாரிப்பாளர்கள் தன்னிடம் துண்டு போட்டு சம்பளம் பேசினால், எக்கச்சக்க விரல்களை வளைச்சு வளைச்சு பிடிக்கிறாராம். அந்த வகையில், தற்போது மேற்படி நடிகர் பத்து விரல்களை பஞ்ச் பண்ணுவதாக கூறுகிறார்கள்.