டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தெலுங்கு திரை உலகின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி சில நாட்களுக்கு முன்னர் மும்பையில் உள்ள ப்ரீச் கேன்டி மருத்துவமனையில் தோள்பட்டையில் அறுவை சிச்சை செய்ய அனுமதிக்கப்பட்டார். நீண்ட நாட்களாக தோள்பட்டை வலியால் அவதிபட்டு வந்த சிரஞ்சீவி கிரேட்டர் ஐதராபாத் முனிசிபல் கார்பரேஷனில் ஓட்டு போடுவதையும் தவிர்த்து விட்டு அறுவை சிகிச்சை செய்ய மும்பைக்கு சென்றார். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து மருத்துவமனையில் ஓய்வெடுத்து வந்த சிரஞ்சீவி நலமுடன் ஐதராபாத்தில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பியுள்ளார். இரண்டு வாரங்கள் ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஓய்விற்கு பின்னர் சிரஞ்சீவி தனது 150வது படத்தின் படப்பிடிப்புகளில் கலந்து கொள்வார் என கூறப்படுகின்றது. கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக் சிரஞ்சீவியின் 150வது திரைப்படமாக உருவாகவுள்ளது.